Friday, May 28, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -2

உபசாரம் - பாகம் 2 (முன்பு செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)

முதல் பகுதி இங்கே!
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.

Annaikku_64_Upacha...



11. தைலம்

ஏதம்பக தைலமம்ப விவிதை: புஷ்பைர் முஹுர் வாஸிதம்
ந்யஸ்தம் ரத்னமயே ஸுவர்ண சஷகேப்ருங்பைர் ப்ரமபிதர் விரதம் !
ஸாநநந்தம் சுரஸுந்தரீ ப்ரபிதோஹஸ்தைச் த்ருதம் தேமபா
கேசேஷுப்ரமரப்மேஷு ஸகலேஷ்வங்கேஷு சாலிப்பதே !!


ரத்னமிழைத்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருப்பதும், வண்டுகளால் சூழப்பட்டதும், வாசனையுள்ளதுமான தைலத்தை உங்கள் உடம்பிலும், கூந்தலிலும் பூசிடுங்கள் தாயே!


12. வாஸனைப்பொடி ஸ்நானம்

மாத:குங்கும பங்கநிர்மிதமிதம் தேஹே தவோத் வர்த்தனம்
பக்த்யாஹம் கலயாமி ஹேமரஜஸா ஸ்ம்மீச்ரிதம் கேஸரை: !
கேசாநாமல கைர்விசோத்ய விசதான் கஸ்தூரி கோரஞ்சிதை:
ஸ்நானம் தே நவரத்னகும்ப ஸஹிதை ஸம்வ ஸீதேஷ்ணோதகை !!

குங்குமப் பூ, மகிழம்பூ முதலிய வாஸனைப் பொடிகளை உம் உடம்பிற்கு அர்ப்பணம் செய்கிறேன். உங்கள் கூந்தலை சிக்கெடுத்து வாரி, ரத்ன கலசங்களில் வைக்கப்பட்ட வெந்நீரால் ஸானம் செய்விக்கிறேன்.

மேலே இருக்கும் இரு உபசராங்களுக்கான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

கார்முகிலின் நிறங்கொண்ட கூந்தலிலே தைலமிட்டு
தேன்மொழியாள் தேனினிய தேகத்திலும் தேய்த்துவிட்டு
வாசம்மிகு பொடியெடுத்து வாகாகக் குழைத்துவிட்டு
நேசமுடன் நீராட்ட நேரிழையே நீமகிழ்வாய்! (11)

பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்
தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்
பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்த
பஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)

அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்
இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்
சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்
செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்! (12)

13. அபிஷேகம்

ததிதுக்த க்ருதை: ஸமக்ஷினாக:
ஸீதபாசர்கரையா ஸமன்விதை: !
ஸ்நபயாமி தவாஹ மாதராத்
ஜனனித்வாம் புநர்ஷ்ண வாரிபி: !!

தயிர், பால், நெய், தேன், வெள்ளைச் சர்க்கரை முதலியவைகளால் உமக்கு அபிஷேகம் செய்து, மறுபடியும் வெந்நீரால் ஸ்நானம் செய்விக்கிறேன்.

காவிரியில் நீர்முகர்ந்து கதகதப்பாய் சூடேற்றி
மான்விழியாள் மேனியினை மென்மையுடன் நீராட்ட
விடங்கொண்ட கண்டனைதம் வலங்கொண்ட பைங்கிளியே
நிலங்கொண்டு வணங்குகின்றோம் நிரந்தரியே மகிழ்ந்திடுவாய்! (13)

14. ரத்ன ஸ்வர்ணோதக ஸ்நானம்

ஏலாசீரஸுவாஸிதை ஸகுஸுமை: கங்காதி தீர்த்தோதகை:
மாணிக்யாமல மெளதிகாம்ருதரஸை: ஸவர்சை: ஸுவர்ணோதகை: !
மந்த்ரான் வைதீக தாந்த்ரிகான் பரிபடன் ஸானந்த மத்யாதராத்
ஸ்நானம் தேபரிகல்பயாமி ஜனனி ஸ்நேஹாத்வமங்கிகுரு: !!

ஏலக்காய், வெட்டிவேர், வாஸனை புஷ்பங்கள் ஆகியவற்றுடன் கூடிய, கங்காதி தீர்த்தங்கள், மாணிக்கம் ஆகிவை கலந்த சுவர்ண ஜலத்தால் வைதீக, தாந்த்ரீக மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்விக்கிறேன் அம்மா!.

மணம்மிகுந்த மலர்களுடன் குளிர்ச்சிதரும் குருவேரும்
குணம்மிகுந்த ஏலமுடன் புனிதகங்கை நீரிலிட்டு
மந்திரங்கள் ஜெபித்தபடி சுந்தரிக்கு நீராட்ட
சந்திரனும் நாணுகின்ற சதுர்முகியே மகிழ்ந்திடுவாய்! (14)

15. வஸ்த்ரம்

பாலார்க்க த்யுதி தாடிமீப குஸுமப்ரஸ்பர்த்தி ஸர்வோத்தமம்
மாதஸ்த்வம் பரிதேஹி திவ்யவஸனம் பக்த்யாமயா கல்பிதம் !
முத்தாபிர்க்ரதிதம் ஸுகஞ்சுகமிதம் ஸ்வீக்ருத்ய பீதப்ரபம்
தப்த ஸ்வர்ணஸமானவர்ண மதுலம் ப்ராவர்ண மங்கீ குரு !!

பாலசூர்யனின் வர்ணத்தில், மதுளம்பூ போன்ற சிவந்த பட்டாடைகளை உமக்கு அளிக்கிறேன். முத்துக்கள் சேர்க்கப்பட்ட தங்க நிறமுள்ள ரவிக்கையையும், உருக்கிய தங்கம் போன்ற மேலாடையையும் ஏற்றுக் கொள்வீர்களாக.

16. பாதுகை

நவரத்னமயே மயார்பிதே கமநீய தபநீய பாதுகே !
ஸவிலா ஸமிதம் பதத்வயம் க்ருபயாதேவி தயோர் விதியதாம் !!

நவரத்னமயமான அழகான பாதுகைகளை உமக்கு அளிக்கிறேன், அதில் உமது இருபாதங்களையும் அருள் கூர்ந்து வைத்து , அணியுங்கள் அம்பிகே!

கட்டித்தங்கம் வெட்டிவந்து கச்சிதமாய் நூலெடுத்து
சிப்பிகளைச் சேர்த்துவந்து முத்துகளைக் கோர்த்தெடுத்து
பொன்நிகர்த்த மேனிக்கு பொருத்தமான இரவிக்கை செய்ய
கண்நிகர்த்த காரிகையே களிப்புடனே அணிந்தருள்வாய்! (15)

செக்கர்வானம் அதுபோலே சிவந்திருக்கும் பட்டாடை
சொக்கர்பக்கம் வீற்றிருக்கும் சுந்தரியே உனக்காக
முத்துநவ ரத்தினங்கள் பதித்துவைத்த பாதுகைகள் (16)
வித்தாகி விளைவுமான நித்திலமே உனக்காக!

17. கூந்தல் ஒப்பனை

பஹுபி ரகரூ தூபை: ஸாத்ரம் தூபயித்வா
பகவதி தவ கோசான் கங்கதைர் மார்ஜயித்வா !
ஸுரபிபி ரரவந்தை: சம்பைகச் சார்ச்சயித்வா
ஜடிதி கனக ஸூத்ரை ஜூடயன் வேஷ்டயாமி !!

அகிற் புகையால் தூபங்காட்டி, கூந்தலை வாரி முடித்து, தாமரை, சம்பக மலர்களால் அர்ச்சித்து, ஸ்வர்ண சூத்திரத்தால் பின்னிக் கட்டிவிடுகிறேனம்மா.

காற்றோடு மணம்பரப்பும் மலர்களெல்லாம் ஏங்குகின்ற
மாற்றேதும் இல்லாத மங்கையுந்தன் கூந்தலுக்கு
அகிலோடு சாம்பிராணி புகைபோட்டு மணம்சேர்க்க
புவியோரைக் காக்கவந்த பூவிழியே நீமகிழ்வாய்! (17)

18. கண்களுக்கு மையிடல்

ஸெளவிராஞ்ஜன மிதமம்ப சக்ஷஷோஸ்தே
விந்யஸ்தம் கனக சலாகயா மயாயத் !
தந்நுனம் மலினமபி த்வதக்ஷி ஸங்காத்
ப்ரும்மேந்த்ராத்வ பிஷைணீய தாமியாய !!

அம்மா!, இந்த ஸெளவீராஞ்சன மையை ஸ்வர்ணக் குச்சியால் உமது கண்களுக்கு தீட்டியது கருப்பானாலும், இது உமது கண்களில் சேர்க்கையால் பிரம்மாதி தேவர்களால் விரும்பப்படுவதாகவே இருக்கிறது.


அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்
நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட
கரந்தொட்டு பொற்கம்பி முனையினிலே மையெடுத்து
முகந்தொட்டு வாள்விழிக்கு மீன்போலே எழுதிவிட (18)

19. ஆபரணம்

மஞ்ஜீரே பதயோர் நிதாய ருசிராம்வின்யஸ்ய காஞ்சீம் கடெள
முக்தாஹார முரோஜயோ ரதுபமாம் நக்ஷத்ர மாலாம் கலே !
கோயூராணி புஜேஷா ரத்னவலயச் ரேணீம் கரேஷுக்ரமாத்
தாடங்கே தவகர்ணயோர்விததே சீர்ஷேச சூடாமணிம் !!

திருவடிகளில் பாதரசமும், இடுப்பில் ஒட்டியாணத்தையும், மார்பினில் முத்தாரமும், கழுத்துக்கு அட்டிகையும், தோள்களில் வாகுவலயங்களும், கைகளில் ரத்ன வளையல்களும், காதுகளில் அழகிய தோடுகளும்,தலையில் சூடாமணீயையும் அணிவிக்கிறேனம்மா.

இல்லாத கொடியிடையில் ஒய்யார ஒட்டியாணம்
இடைதாங்கும் மார்பகத்தில் தவழ்ந்திருக்க முத்தாரம்
சங்குக் கழுத்திற்கு சரியான அட்டிகையும்
வாழைத்தண்டு தோள்களுக்கு வாகு வலயங்களும்

இரட்சிக்கும் கரங்களுக்கு இரத்தினத்தால் கைவளைகள்
எழில்பொலியும் செவிகளுக்கு எடுப்பான காதணிகள்
முடிமீது சுடரொளியாய் அணிசெய்ய சூடாமணி
ஆசையுடன் அணிவிக்க அன்னைநீ மகிழ்ந்திடுவாய்! (19)

20. அலங்காரம்

தம்மில்லேதவ தேவி ஹேமகுஸுமான் யாதாய பாலஸ்தலே
முகதாராஜி விராஜமான திலகம் நாஸாபுடே மெளத்திகம் !
மாதாமெளத்திக ஜாலிகாஞ்ச குசயோ: ஸர்வாங்குளீஷுர்மிகா:
கட்யாம் காஞ்சன கிங்கிணீர் வினிததே ரத்னாவதம் ஸம்ச்ருதெள: !!

சொருக்கினில் மலர்கள் சூட்டி, நெற்றியில் திலகமிட்டு, மூக்கினில் புல்லாக்கு, மூக்குத்தி பொருத்தி, மார்புக்கு முத்து ஜாலங்களையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அணிவிக்கிறேன்.
பலநிறத்தில் புதுமலர்கள் கூந்தலிலே சூட்டிவிட்டு
பிறைநுதலில் சிறப்புடனே சிந்தூரத் திலகமிட்டு
சிமிழ்போன்ற நாசியிலே சிட்டுப்போல் புல்லாக்கும்
விதவிதமாய் மோதிரமும் வைஷ்ணவியே அணிந்தருள்வாய்! (20)
தொடரும்....

Friday, May 21, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்...பாகம்-1

இது அம்மன் பாட்டில் 194-ஆம் பதிவு! 200 எட்டும் வரை, இந்த 64 உபசாரப் பதிவுகளைப் பார்த்து, பின்னர் 200-ஆம் இடுகையைக் கொண்டாடுவோம்!
இந்த இடுகைகள் முன்பு செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை! இங்கு மீள்பதிக்க இசைந்த மெளலி அண்ணாவுக்கு, அம்மன் பாட்டுக் குழுவினரின் நன்றி!

அன்னையின் மீள் பதிவுகளை,
மீள் உபசாரங்களாகக் கருதி...
மீண்டும் வாசித்து மகிழுங்கள்!


உபசாரம் - பாகம் 1

ஆதி சங்கரரால் அன்னையின் மிது இயற்றப்பட்ட பல நூல்களில் இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜையும் ஒன்று. இதைப் பாராயணம் செய்வதே 64 உபசாரங்களுடன் செய்யும் பூஜைக்கு சமம் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

செளந்தர்ய லஹரியுடன் இந்த வலைப்பதிவை முடிக்க இருந்தேன். ஆனால் அம்பிகைக்கு இங்கேயே ஒரு பூஜையைச் செய்து முடிக்க நினைக்கிறேன். இந்த நவராத்ரி தினங்களில் சில பதிவுகளாக இந்த 64 உபசார ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.

64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.
Annaikku_64_Upacha...
இன்றிலிருந்து தொடராக விஜயதசமிக்குள் இதை முடிக்க முயல்கிறேன்.
******************************************************************************



1. சுப்ரபாதம்

உஷஸி மாகத மங்கள காயனை
ஜடிதி ஜாக்ருஹி ஜாக்ருஹி ஜாக்ருஸி!
அதிக்ருபார்த்ர கடாக்ஷ நிரீக்ஷணை:
ஜகதிதம் ஜகதம்பு ஸுகீ குரு !!

தாயே!, காலையில் பக்தர்கள் பாடும் கானத்தை கேட்டு சீக்கிரம் எழுந்து உலகிற்கு நன்மை அருள்வாயாக. கவிநயா அவர்கள் எழுதிய சுப்ரபாதம் கீழே
புள்ளினங்கள் பண்ணமைத்து பூபாளம் இசைத்திருக்க (1)
வெள்ளியதும் முளைத்ததம்மா வெண்ணிலவே எழுந்தருள்வாய்!
காதளவில் நீண்டிருக்கும் கண்ணிமைகள் மலர்ந்திடவே
சீதளமே புவியனைத்தும் சீர்பெறவே எழுந்தருள்வாய்!

2. மணிமண்டபம்

கனக மய விதர்தி சோபமானம் !
திசிதிசி பூர்ண ஸுவர்ண கும்ப யுக்தம்
மணிமய மண்டப மேஹி மாத:
மயிக்ருபபாஸு ஸமர்சனம் க்ருஹிதும் !!

நான் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்ள மணிமண்டபத்திற்கு வாருங்கள் அம்பிகையே!.

3. மணிமய மாளிகை

கனக கலச சோபமான சீர்ஷம்
ஜலதர லம்பிஸமுல்லஸத் பதாகம் !
பகவதி தவ ஸந்நிவாஸ ஹேதோ
மணிமய மந்திர மேத தர்ப்பயாமி !!

இந்த மணிமண்டபம் தங்க கலசங்கள் கொண்டது. விண்ணளாவும் கொடிகள் பறக்கின்றன. இதில் வாசம் செய்ய வாருங்கள் தேவி. மேலே இருக்கும் இரு உபசாரங்களுக்கு இணையான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

செம்பொன்னால் வடிவமைத்து செய்துவைத்த மாளிகையில் (2)
ஆயிரமாம் தோரணங்கள் அர்த்தமணி மண்டபங்கள்
சேயிழையே உனக்கெனவே செதுக்கி வைத்த மண்டபத்தில் (3)
பார்முழுதும் போற்றிடவே வீற்றிருக்க வந்தருள்வாய்!

4. பல்லக்கு

தபமீயமயீ ஸுதூலிகா கமநீயா ம்ருதுலோத்தரச்சதா !
நவரத்ன விபூஷிதாமயா சிபிகேயம் ஜகதம்பதேர்பிதா !!

அழகானதும், மென்மையானதும், நவரத்னங்களால் இழைக்கப்பட்டதுமான பல்லக்கை உங்களுக்கு அளிக்கிறேன். கவிநயா அவர்களின் படைப்பு கீழே!

ஏற்றிவைத்த தீபங்கள் எழிலுடனே ஒளிர்ந்திருக்க
போற்றியுன்னை வேண்டிநிற்கும் பக்தர்மனம் களித்திருக்க
மாற்றும்மணம் மாறாத மலர்கள்அலங் கரித்திருக்க
காற்றேகும் பல்லக்கில் கற்பகமே எழுந்தருள்வாய்! (4)

5. சிம்மாசனம்

விவித குஸும கீர்ணே கோடி பாலார்க்க வர்ணே !
பகவதீ ரமணீயே ரத்ன ஸிம்ஹாஸனேஸ்மின்
உபவிச பதயுக்மம் ரத்ன பீடநிதாய !!


ஸுவர்ணமயமான மேடைமீது, கோடி சூர்யப் பிரகாசமான, அழகான ரத்ன சிம்மாசனத்தில் வந்து அமருங்கள் தாயே!

6. மேல் விமானம்

மணி மெளக்திக நிர்மிதம் மஹாந்தம் கனகஸ்தம்ப சதுஷ்ட்யேன யுக்தம் !
கமனீப தமம் பவானி துப்யம் நவமுல்லோச மஹம் ஸமர்ப்பயாமி !!

மணி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தூண்கள் தாங்கும் புத்தம் புது மேல் விமானத்தை உமக்கு அளிக்கிறேன்.கவிநயா அவர்கள் தமிழில் செய்த சிம்மாசனம் மற்றும் மேல்விமான வர்ணனை கீழே!

தகதகக்கும் தங்கத்தில் தாங்கிநிற்க தூணமைத்து
பளபளத்து உளம்மயக்கும் முத்துவிதா னத்திலே (6)
ஜொலிஜொலிக்கும் இரத்தினங்கள் பதித்தசிம் மாசனத்தில்
கொலுவிருக்க வேண்டுகின்றோம் கோகிலமே வந்தருள்வாய்! (5)

7. பாத்யம்

தூர்வயா ஸரஸிஜான்வித விஷ்ணு
க்ராந்தயா ச ஸஹிதம் குஸுமாட்யம் !
பத்மயுக்ம ஸத்ருசேபத யுக்மே
பாத்ய மேத துரரீகுரு மாத: !!

தூர்வை, தாமரை, விஷ்ணுக்ராந்தி முதலிய புஷ்பங்கள் நிறைந்த பாத்யத்தை உமது பாதங்களில் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக.

தாயுன்னைத் தாங்கிநிற்கும் தாமரையின் இதழெடுத்து
மாலவனின் பெயர்கொண்ட கிரந்திமலர் சேர்த்தெடுத்து
ஆய்ந்துஇன்னும் மலரெடுத்து தூயகங்கை நீரிலிட்டு
தேமலர்போல் தாளிணைகள் தூய்மைசெய்ய நீயருள்வாய்! (7)

8. அர்க்யம்

கந்த புஷ்ப யவஸர்ஷப தூர்வா
ஸம்யுதம் கிலகுசாக்ஷத மிச்ரம் !
ஹேம பாத்ர நிஹிதம் ஸஹரத்னை:
அர்க்யமேத துரரீகுரு மாத: !!

கந்த புஷ்பம் நவதான்யம், தூர்வை, எள்ளுகர்ப்பம் அக்ஷதௌ ஆகியவைகள் கலந்து தங்கக் கிண்ணத்தில் வைக்கப்பட்ட அர்க்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

எண்ணுகின்ற எண்ணம்முதல் பண்ணுகின்ற செயல்வரைக்கும்
கண்ணுதலான் இடப்பாகம் கொண்டவளே உனக்கேயாம்
சந்தனத்தால் நீரெடுத்து சமர்ப்பணம் செய்யுகின்றோம்
சியாமளையே கோமளமே கருணையுடன் ஏற்றருள்வாய்! (8)

9. ஆசமனம்

ஜலஜத்யுதினா கரேணா ஜாதீ
பலதக்கோல லவங்க கந்த யுக்தை: !
அம்ருதை ரம்ருதை ரிவாதி சீதை:
பகவத்யாசமனம் விதீயதாம் !!

ஜாதிக்காய், கந்தம், லவங்கம் இவைகளுடன் கூடிய, அமிர்தம் போன்ற குளிர்ந்த ஜலத்தால் ஆசமனம் செய்யுங்கள் அம்மா!

10. மதுபர்க்கம்

நிஹிதம் கனகஸ்ய ஸம்புடே
பிஹிமே ரத்ன பிதானகேன யத்!
ததிதம் ஜகதம்ப தேர்பயிதம்
மதுபர்க்கம் ஜனனிப்ரக்ருஹ்யதாம்!!


தங்க ஸம்புடத்தில், ரத்ன மூடியால் மூடி வைக்கப்பட்ட மதுபர்க்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே! ஆசமனம், மதுபர்க்கம் ஆகிய இரண்டிற்கும் கவிநயா அவர்கள் எழுதிய வர்ணனை கீழே!

ஏலமுடன் சாதிக்காய் சேர்த்திட்ட குளிர்நீரை
கோலஎழில் கொண்டவளே கொஞ்சம்நீ பருகிடுவாய் (9)
பாலோடு தேன்கலந்தே பொன்செம்பில் தருகின்றோம்
வேலாடும் விழியுடையாய் விருப்பமுடன் பருகிடுவாய்! (10)