Monday, June 11, 2012

நினைவில் உலவும் நிலவே!



ஹிந்தோளம் ராகத்தில் சுப்பு தாத்தா பாடியது, இதோ! மிக்க நன்றி தாத்தா!


நினைவில் உலவும் நிலவே என்றன்
நேரில் வாராயோ?
மனதில் பொங்கும் ஏக்கந் தன்னை
அம்மா அறியாயோ?

பகலும் இரவும் போலே என்றன்
உள்ளம் மாறுதம்மா
சுழலும் மாயை தன்னில் சிக்கி
தானும் உழலுதம்மா

என்றன் மனதை சீராக்கி அதில்
நீயே நிலைத்திட வேண்டும்
என்றன் நினைவை நேராக்கி அதில்
நீயே நிறைந்திட வேண்டும்

என்றன் மனதில் பொங்கும் அன்பு
எல்லாம் உனக்குத் தான்!
உன்றன் அன்பின் மழையில் நனையும்
உரிமை எனக்குத் தான்!


--கவிநயா 


3 comments:

  1. Enna Alagaana Kavithai!
    Natarajan

    ReplyDelete
  2. நன்றி திரு.நடராஜன்!

    ReplyDelete
  3. வாருங்கள் ப்ரியாராஜன். உங்கள் ஆராய்ச்சி நல்லபடி அமைய வாழ்த்துகள்! வருகைக்கு நன்றி :)

    ReplyDelete