Thursday, August 8, 2013

கரை இதுவே !



 கரை  இதுவே !
(subbu sir  sings  http://www.youtube.com/watchv=YyvaCODGQpI  )                                         

மாயைக் கடலிலென் மனக்கலம் நிலையின்றி
                                                       ஆடி அலையுதம்மா .
 மதியோ  திசைகாட்டியற்ற   மாலுமியாய் 
                                         கரைதேடித் தவிக்குதம்மா.


புலன்களாம் முதலைகள்  ஆசைப் பற்களால்
                        கலந்தனைத் துளைக்குதம்மா .
துளைவழி புகுந்த மாயை நீர் கலந்தனை
                                     மூழ்க்கிட முயலுதம்மா.


உள்ள  இடமெது  என்று  உணருமுன்
                       இருள்வந்து சூழ்ந்ததம்மா.
செல்லுந்திசை புரியாத மதியோ
                      கரைதேடிச் சோர்ந்ததம்மா.


 கலங்கரை விளக்கமாம் கண்களால்  கருணையாம்
                                    ஒளிதனைப்  பாய்ச்சிடம்மா !.
கலங்கிடும் மதிக்கு " கரை இதுவே! " என்றுன்
                                        மலர்க்கழல் காட்டிடம்மா !


பேரருட்காற்றாலென்  மனக்கலந்தன்னையுன்
                                         திசையினில் திருப்பிடம்மா.!
பாசத்தாலதனைக் கட்டியுன்  திருக்கழற்
                                             கரைதனில் நிறுத்திடம்மா!

2 comments:

  1. கரை இதுதான்! அழகான பாடல்.

    (video private - அப்படின்னு வருது...)

    ReplyDelete
  2. மாயையைக் கடலாகவும், மனத்தினைக் கலமாகவும் உருவகிக்கும் பாடல் அருமை!!!. மிக நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete