Monday, June 25, 2018

உன்னை விட்டால் எவருண்டு?



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என் விழியில் நீர் வழிந்தால்
உன் மடியில் தான் விழுவேன்
உன்னை விட்டால் எவரெனக்கு உமையவளே, உன்
துணை இருந்தால் பிழைத்திருப்பேன் உலகினிலே
(என் விழியில்)

எத்தனையோ துன்பம் உண்டு
ஏதேதோ துயரம் உண்டு
அத்தனையும் தள்ளி வைத்தேன் தாயே, உன்னை
அண்டி வந்தேன், அருள வேண்டும் நீயே
(என் விழியில்)

உன் வதனம் மனதில் வைத்தேன்
உன் பெயரை நாவில் வைத்தேன்
தினந் தினமும் உன்னை எண்ணித் தானே, இந்த
உலகினிலே உலவுகிறேன் நானே
(என் விழியில்)


--கவிநயா

No comments:

Post a Comment