Monday, November 6, 2017

அழகு மயில்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகு மயில் போல அன்னை ஆடி வருவாள், நல்ல

பழகு தமிழ் பாடல் கேட்டு ஓடி வருவாள்

(அழகு)



குழந்தை மனம் கொண்டு விட்டால் கொஞ்சி வருவாள், செல்லக்

குழந்தை யெனச் சேர்த்தணைக்கத் தேடி வருவாள்

(அழகு)



ஆதிசிவன் பாதியவள் அசைந்து வருவாள்

ஆதிசேஷன் குடை பிடிக்க இசைந்து வருவாள்

துன்பமெல்லாம் தீர்த்து வைக்கத் தேவி வருவாள், உண்மை

இன்பமெல்லாம் தானெனவே உணரத் தருவாள்

(அழகு)


--கவிநயா

No comments:

Post a Comment