
ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே
ஆமென் றருளும் அன்னையும் நீயே
வாஎன் றதும்உடன் வருபவள் நீயே
தாஎன் றதும்வரம் தருபவள் நீயே
சத்தியம் காக்கும் உத்தமி நீயே
பக்தரைக் காக்கும் சக்தியும் நீயே
வித்தகர் போற்றும் நித்திலம் நீயே
சித்தரும் போற்றும் சித்திரம் நீயே
கற்றவர் போற்றும் பெட்டகம் நீயே
மற்றவர் போற்றும் மாமணி நீயே
கற்பனைக் கெட்டா கற்பகம் நீயே
பொற்பதம் பற்ற புகல்தரு வாயே!
--கவிநயா




