Saturday, June 30, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 12 [272-300]


"மாரியம்மன் தாலாட்டு" 12 [272-300]


ஓம் சக்தி துணை

மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 272-300]




மாரியென்றால் மழைபொழியும்


தேவியென்றால் தேன்சொரியும்


தேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே


திரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா


பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே


தாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே


பேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே


குருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்


கோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]


இப்படிக்கு நீயிருந்தால் இனி பிழையோம் தாயாரே

கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே


யுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே


கலியுகத்தில் தாயாரே கண்கண்ட தெய்வம் நீ


உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை


என்னைப்போல் மைந்தர்தான் எங்குமுண்டு வையகத்தில்


அனலை மதியாய் நீ யாவரையும் சட்டை பண்ணாய்


புனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டைபண்ணாய்


வருந்தி யழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணாமல்


பாலகனைக் காத்துப் பாதத்தா லுதைத்துவிடு [290]


மைந்தனைக் காத்து மகராசி உதைத்துவிடு


குழந்தையைக் காத்து கொம்பனையே உதைத்துவிடு


ஆதிபரஞ்சோதி அங்குகண்ணே வாருமம்மா


வெள்ளிக்கிழமையிலே கொள்ளிக்கண் மாரியரே


வெள்ளியிலுந் திங்களிலும் வேண்டியபேர் பூஜைசெய்ய


பூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே


இந்த மனையிடத்தில் ஈஸ்வரியே வந்தருள்வாய்


வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்


இருந்தமனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள்வாய்


கண்பாரும் கண்பாரும் கனகவல்லித் தாயாரே [300]]


[அருள் இன்னமும் பொழியும்!]

Thursday, June 28, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 11 (241 -- 271]


"மாரியம்மன் தாலாட்டு" -- 11 (241 -- 271]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 241-271]



ஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே

பாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

சொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்

கழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்

நல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க

உரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்

உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா

எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா

கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]


கடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா

பாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா

பேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

மகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா

பெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

ஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா

பூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா

பாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்

பூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்

வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]


பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ

மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ

குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ

சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ

பூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்

ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா

இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா

அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்

குப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே

கொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே [271]

[வளரும்]

Wednesday, June 27, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 10 [213-240]


"மாரியம்மன் தாலாட்டு" -- 10 [213-240]


ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"


[வரிகள் 213-240]


அடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி


மிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே


தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே

அவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே

சிவனுடன் வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே

அரனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே

பிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே
விஷ்ணுவுடன் வாதாடும் வேதாந்த மாரிமுத்தே [220]



எமனுடன் வாதாடும் எக்கால தேவியரே

தேவருடன் வாதாடும் தேவிகன்ன னூராளே
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே கர்த்தனிட தேவியரே

நெருப்பம்மா உன்சொரூபம் நிஷ்டூரக் காரியரே

அனலம்மா உன்சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே

தணலம்மா உன்சொரூபம் தரிக்கமுடி போதாது

அண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே

காத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே

தொட்டியத்துச் சின்னானைத் தொழுதுவர பண்ணசக்தி [230]



கருப்பனையுங் கூடவேதான் கண்டு பணியவைத்தாய்
பெண்ணரசிக்காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய்
அடங்காத பிள்ளையென ஆண்டவனைக் கழுவில் வைத்தாய்

துஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கிக் கழுவில் வைத்தாய்

பாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே

வாரி யெடுக்கவொரு வஞ்சியரை யுண்டுபண்ணாய்

முத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணேயென்று

தாதியரைத் தானழைத்துத் தாயாரே முத்தெடுப்பாய்

முத்தெடுத்துத் தான்புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே [240]
[இன்னும் வரும்]

Tuesday, June 26, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 9 [181-210]

"மாரியம்மன் தாலாட்டு" -- 9 [181-212]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 181-212]


உற்ற துணையிருந்து உகந்தரியே காருமம்மா

உன்னைவிட பூமிதனில் உற்றதுணை வேறுமுண்டோ

பக்கத் துணையிருந்து பாதுகாத்து ரட்சியம்மா

செக்கச் சிவந்தவளே செங்கண்ணன் தங்கையரே

மங்கையெனும் மாதரசி மகராசி காருமம்மா

திங்கள் வதனியரே தேவிகன்ன னூராளே

எங்கள்குல தேவியரே ஈஸ்வரியே கண்பாரும்

மக்கள் விநோதினி மாதாவே கண்பாரும்

ஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால்

வாழ்வதுதான் எக்காலம் வார்ப்புச் சிலையாளே [190]

ஆயி மகமாயி ஆரணங்கு சொற்காரணியே

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

இரங்கிறங்கும் தாயாரே எங்களைக் காப்பாற்றுமம்மா

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

வீரணன் சோலையிலே ஆரணம தானசக்தி

நீதிமன்னர் வாசலிலே நேராய்க் கொலுவிருந்தாய்

கொலுவிருந்த சக்தியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே
போட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே

பொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே [200]


செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

அடங்காத மானிடரை ஆட்டிவைக்கும் மாரிமுத்தே

துஷ்டர்கள் தெண்டனிட்டு துடுக்கடக்கும் மாரிமுத்தே

கண்டவர்கள் தெண்டனிட்டு கலக்கமிடும் மாரிமுத்தே


அண்டாத பேர்களைத்தான் ஆணவத்தைத் தானடக்கி

இராஜாக்க ளெல்லோரும் நலமாகத் தான்பணிய

மகுட முடிமன்னர் மனோன்மணியைத் தான்பணிய


கிரீட முடிதரித்த கீர்த்தியுள்ள ராஜாக்கள்


மகுடமுடி மந்திரிகள் மன்னித்துத்தெண்ட னிட்டுநிற்க

பட்டத் துரைகள் படைமுகத்து ராஜாக்கள் [210]



வெட்டிக் கெலித்துவரும் வேதாந்த வேதியர்கள்

துஷ்டர்களைத் தானடக்கும் சூலி கபாலியம்மா [212]
[தாலாட்டு தொடரும்]

Monday, June 25, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 8 [151-180]

"மாரியம்மன் தாலாட்டு" -- 8 [151-180]




ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்



"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 151- 180]




0ஆதிபர மேஸ்வரியே அருகேதுணை நீயிரம்மா

உன்னைப்போல் தெய்வத்தை உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் மைந்தர் எங்குமுண்டு வையகத்தில்

உன்-மகிமை யறிந்தவர்கள் மண்டலத்தில் யாருமில்லை

உன் -சேதி யறிவாரோ தேசத்து மானிடர்கள்

உன் -மகிமையை யானறிந்து மண்டலத்தில் பாடவந்தேன்

உன் -மகிமையறி யாதுலகில் மாண்டமனு கோடியுண்டு

உன் -சேதியறி யாதுலகில் செத்தமனு கோடியுண்டு

தப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து

ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம் [160]


மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்

தேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா

கொண்டு மனம்பொறுத்து கொம்பனையே காருமம்மா

கார்க்கக் கடனுனக்குக் காரண சவுந்தரியே

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

வேணுமென்று காரடிநீ வேப்பஞ் சிலையாளே

பக்கத் துணையிருந்து பாலகனைக் காருமம்மா

பொரிபோ லெழும்பிநீ பூரித்து ஆலித்து

ஆலித்து நீயெழும்பி ஆத்தா ளிறக்குமம்மா

சிரசினிற் முத்தையம்மா முன்னுதாய் நீயிறக்கும் [170]


கழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்

தோளினில் முத்தையம்மா துரந்தரியே நீயிறக்கும்

மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்

வயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கும்

துடையினில் முத்தையம்மா தேவியரே நீயிறக்கும்

முழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கும்

கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கும்

பாதத்தில் முத்தையம்மா பாரினி லிறக்கிவிடும்

பூமியில் இறக்கிவிடும் பெற்றவளே காருமம்மா

பெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே [180]

[தாலாட்டு வரும்]

Sunday, June 24, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 7 [121 - 150]

"மாரியம்மன் தாலாட்டு" -- 7 [121 - 150]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்






"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 121 - 150]

கும்பத் தழகியம்மா கோபாலன் தங்கையரே

கும்பத்து மீதிருந்து கொஞ்சுமம்மா பெற்றவளே

கொஞ்சுமம்மா பெற்றவளே குறைகளொன்றும் வாராமல்

உனக்குப் பட்டு பளபளென்ன பாடகக்கால் சேராட

உனக்குமுத்து மொளமொளென்ன மோதிரக்கால் சேராட

உலகமெல்லாம் முத்தெடுக்க உள்ளபடிதான் வந்தாய்

தேசமெல்லாம் முத்தெடுப்பாய் தேவிகன்ன னூராளே

முத்தெடுக்கத் தான்புகுந்தாய் உத்தமியே மாரிமுத்தே

உனக்கு ஈச்சங் குறக்கூடை யிருக்கட்டும் பொன்னாலே

உனக்கு தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே [130]


குறக்கூடை முத்தெடுத்து கொம்பனையே நீ புகுந்தாய்

கோயிலின் சந்தடியில் கூப்பிட்டால் கேளாதோ

அரண்மனைச் சந்தடியில் அழைத்தாலும் கேளாதோ

மாளிகையின் சந்தடியில் மாதாவே கேட்கிலையோ

மக்களிட சந்தடியோ மருமக்கள் சந்தடியோ

பிள்ளைகளின் சந்தடியோ பேரன்மார் சந்தடியோ

அனந்தல் பெருமையோ ஆசாரச் சந்தடியோ

சந்தடியை நீக்கியம்மா தாயாரு மிங்கே வா

கொல்லிமலை யாண்டவனைக் குமர குருபரனை

காத்தவ ராயனைத்தான் கட்டழகி தானழையும் [140]


தொட்டியத்துச் சின்னானை துரைமகனைத் தானழையும்

மதுரை வீரப்பனையென் மாதாவே தானழையும்

பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும்

கருப்பண்ண சுவாமியையுங் கட்டழகி தானழையும்

முத்தாலு ராவுத்தன் முனையுள்ள சேவகரை

மூங்கில் கருப்பனைத்தான் சடுதியிற் றானழையும்

பெரியபாளையத் தமர்ந்த பேச்சியரே மாதாவே

பாளையக் காரியம்மா பழிகாரி மாரிமுத்தே

கன்னனூர் மாரிமுத்தே கலகலென நடனமிடும்

உன்னைப் பணிந்தவர்க்கு உற்றதுணை நீயிரம்மா [150]



[தாலாட்டு வளரும்]



Saturday, June 23, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 6 [91-120]

"மாரியம்மன் தாலாட்டு" -- 6 [91-120]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்




"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 91-120]





எக்கால தேவியரே திக்கெல்லாம் ஆண்டசக்தி

காசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாருமம்மா

ஊசி வளநாடு உத்தியா குமரிதேசம்

அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை

எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை

பத்தென்றா லொன்றறியேன் பாலனம்மா உன்னடிமை

பாடவகை யறியேன் பாட்டின் பயனறியேன்

வருத்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன்

பேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே [100]


குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ

மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ

பாலன் வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ

கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி

சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே

வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்

தேடி யழைக்கின்றேன்நான் தேவிமுகங் காணாமல்

ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி

பாலன் குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி

மைந்தன் குழந்தையம்மா மகராசி காருமம்மா [110]


கல்லோடீ உன்மனது கரையிலையோ எள்ளளவும்

இரும்போடீ உன்மனது இரங்கலையோ எள்ளளவும்

கல்லுங் கரைந்திடுமுன் மனங்கரையா தென்னவிதம்

இரும்பு முருகிடுமுன் இருதயமுருகா தென்னவிதம்

முன்செய்த தீவினையோ பெற்றவளே சொல்லுமம்மா

ஏதுமறி யேனம்மா ஈஸ்வரியே சொல்லுமம்மா

கடம்பாடி யெல்லையிலே கட்டழகி வீற்றிருப்பாய்

கடும்பாடி யெல்லைவிட்டு கட்டழகி வாருமம்மா

கரகத் தழகியரே கட்டழகி மாரிமுத்தே

கரகத்து மீதிருந்து கட்டழகி கொஞ்சுமம்மா [120]





[இன்னும் வரும்]

Friday, June 22, 2007

மாரியம்மன் தாலாட்டு" -- 5 [61-90]

மாரியம்மன் தாலாட்டு" -- 5 [61-90]


ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 61 - 90 ]

எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே

திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா

முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி

அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்

தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மாயி மருளியரே மணிமந்திர சேகரியே

வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே

வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்

நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே

நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை [70]


கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே

நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே

நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்

தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்

வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே

தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா

பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா

தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா

கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் [80]


ஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே

பத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார்

வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்

செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

தூண்டிமுள்ளைத் தூக்கி துடுக்கடக்கும் மாரிமுத்தே

ஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட

ரெட்டைச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க

பரமசிவன் வாசலிலே பாற்பசுவைக் காவுகொண்டாய்

ஏமனிட வசலிலே எருமைக்கிடா காவுகொண்டாய்

எருமைக்கிடா காவுகொண்டாய் எக்கால தேவியரே [90]



[இன்னும் வரும்]

Thursday, June 21, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 4

"மாரியம்மன் தாலாட்டு" -- 4

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


[வரிகள் 31 - 60 ]


தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்

மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்

சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்

இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்

சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே

சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா

கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே

கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்

கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே [40]

ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே

படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா

பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே

பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா

ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை

ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா

வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே

அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய

உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய [50]

மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய

பக்கங் கயிரோட பகரச் செடிலசைய

ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை

தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி

சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்

எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்

உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்

கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக

ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே [60]


[இன்னும் வரும்]

Wednesday, June 20, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

"மாரியம்மன் தாலாட்டு" -- 3

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


[கிராமங்களில் இன்று நாமெல்லோரும் காணும் ஒரு காட்சி, தூளி!
தன் புடவையால் கட்டிய தூளியில் குழந்தையை இட்டு, தனக்கு வலப்புறமும், இடப்புறமுமாக ஒரு ராகம் பாடிக்கொண்டே தாய் ஆட்டுவாள்.
அதே போல ஒவ்வொரு வரியையும் இரண்டாகப் பிரித்து ஒரு தாலாட்டு பாடுவது போல இதைப் படித்துப் பாருங்கள்! இன்புறுங்கள்!]

" மாரியம்மன் துதி"

"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா

தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே

திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே

எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி

கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே

காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]

நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே

உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே

உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்

உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்

உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்

உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்

உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே

உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்

உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்

உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]

உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே

உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்

உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா

துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்

துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]


[ஒவ்வொரு வரியையும் மனதில் பதிந்து ஊன்றிப் படிக்க வேண்டியே, சிறு பகுதிகளாக வெளியிடுகிறேன்.]




Tuesday, June 19, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

"மாரியம்மன் தாலாட்டு" -- 2

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


"விநாயகர் துதி"

'காப்பு'

'கொச்சகக் கலிப்பா'

"பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்

மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்

சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்

காதலுட னோதக் கணபதியுங் காப்பாமே"

'வெண் செந்துரை'

"முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே

கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்

வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்

வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்

பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே

காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே

சீரான நல்மருகா செல்வக்கணபதியே

ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே

கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே

வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா

மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே

ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே

தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்

பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே

வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்

தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா

முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே

கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே

முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே

செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்."



"சரஸ்வதி துதி"


"தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்

என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே

வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து

என்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா

கமலாசனத்தாளே காரடி பெற்றவளே

என்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே

என்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா

மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட

சரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா

கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட

பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா."

Monday, June 18, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 1


"மாரியம்மன் தாலாட்டு" -- 1
வெகு நாட்களாக எனது நண்பர் திரு. நாமக்கல் சிபி என்னைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தோத்திரப்பாடலை,

தமிழகத்திலுள்ள அனைத்து இந்துக்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வத்தைப் போற்றிப் பாடும் தோத்திரப்பாடலை,

தமிழ் தெரிந்த அனைவராலும் இயல்பாக மனமொன்றிப் பாடக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,

படித்தவர் முதல்,பாமரர் வரை அனைவராலும் விரும்பிப் பாடப்படும் ஒரு தோத்திரப்பாடலை,

நம்பிக்கையோடு படித்தவர்க்கும், கேட்டவர்க்கும் பலவித நன்மைகளை அளிக்கும் வல்லமை படைத்த ஒரு தோத்திரப்பாடலை,

விளக்கம் எதுவும் இல்லாமலேயே எளிதாய் புரியக்கூடிய ஒரு தோத்திரப்பாடலை,

ஆடி மாதம் வந்தாலே, இறை நம்பிக்கை கொண்ட அனைத்துத் தமிழரும் தவறாது செல்லும் ஒரு திருத்தெய்வத்தின் தோத்திரப்பாடலை,

இன்று தொடங்கி சிறு சிறு பகுதிகளாக தினந்தோறும் இங்கே வழங்க,

எல்லாம் வல்ல பிள்ளையாரையும், எனையாளும் முருகனையும், அந்த மஹாசக்தியையும் வணங்கித் துதித்து,

"எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்துவரும் மாரியம்மன் தாலாட்டு"

எனும் திருத்தோத்திரத்தை நாளை முதல் பதிய எண்ணியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 700 வரிகளுக்கும் மேற்பட்ட இத்தோத்திரத்தை நாளொன்றுக்கு 30 வரிகள் என பதிக்க நினைக்கிறேன்.

ஆடி மாதத் தொடக்கத்தில், அவள் அருளால், அனைவர் கையிலும் முழு நூலும் கிட்டிவிடும் என நம்புகிறேன்

இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை எனக் கருதுவதால், சொல்ல நினைப்பதை முதல், கடைசி பதிவுகளில் மட்டுமே சொல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்குத்தோன்றும் இடங்களில் அருஞ்சொற்பொருள் தேவையெனப் பட்டால் இடுகிறேன்.

உங்களுக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் தயங்காது கேட்கவும். ......தெரிந்த வரையில் சொல்லுகிறேன்.

இதனை ஒட்டி நான் எழுதிய ஒரு சிறு பாவுடன் இதனைத் துவக்குகிறேன்.

நாளை முதல் வருவது மூலநூல்.

இயற்றியவர் யாரெனக் குறிப்பிடவில்லை.

அனைவருக்கும் மாரியம்மன் அருள் கிட்ட வேண்டுகிறேன்.

ஓம் சக்தி மாரியம்மன் துணை.
*********************************************************************

ஓம் கணபதி துணை
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

'எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்'


"மாரியம்மன் தாலாட்டு"

எண்ணியவர்க்கு எண்ணியதெலாம் தரும்,
திண்ணிய மனமுடையோர் தினமுமோதும்
கண் கொடுக்கும் சமயபுரம் மாரியம்மன்
பண்ணிதைப் பாடிட பண்ணிய பாவம் போகுமே!

[இது ஒரு எளிய பக்தன் தன் தாயை அழைத்து, தன் மனதில் தோன்றுகின்ற அத்தனை உணர்வுகளையும்,
மனம் போன போக்கில், இஷ்டப்படி சொல்லிக்கொண்டு போகும் ஒரு துதிப்பாடல்!


இலக்கணம் இதில் பார்க்க வேண்டாம்!
விளக்கமும் தேவையிருக்காது!
அப்படியே ரசியுங்கள்!
அன்னையைத் துதியுங்கள்!]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

Friday, June 8, 2007

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!

குருவை மிஞ்சும் சி'ஷ்'யன் - யாரு தெரியுமா? = ஒரு ஈழத்துப் பெருங்கவிஞர்!

குரு: பாபநாசம் சிவன் அவர்கள்.
சிஷ்யர்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்


வெள்ளிக் கிழமை அதுவுமா, அம்மன் பாட்டு கேட்கலாம் வாங்க!
சி'ஷ்'யர் எப்படிக் குருவை மிஞ்சினார்?

சென்னையில், திருமயிலை (மயிலாப்பூர்-ன்னா எல்லாருக்கும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கும்)
மயிலை மன்னாரு தெரியும், கபாலி தெரியும், முண்டகக்கண்ணி தெரியும்....
- இன்னும் மயிலாப்பூரைப் பத்தி நிறையவே சொல்லலாம்!
- மயில் ஆர்ப்பு ஊர் => மயிலாப்பூர்


"கபாலீ'ஸ்'வரர்-கற்பகாம்பிகை" மேல் பற்பல பாடல்கள் எழுதியுள்ளார் பாபநாசம் சிவன்.
மயிலை விழாக்களைப் பற்றியெல்லாம் கூடப் பாடியுள்ளார்.

அவர் கூடவே மயிலை வீதிகளில் வலம் வந்த சீடர் தான் வீரமணி ஐயர். அவரையும் கற்பகாம்பாள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லையே!


 மயிலை = அன்றும்..இன்றும்...

ஆனால் பாருங்கள்!
கற்பக அம்பிகை மீது, சிவன் பாடியதை விட, சீடர் பாடியதே செம ஹிட்டானது!
குருவை விஞ்சும் சீடராக, வீரமணி ஐயரின் இந்தப் பாடல், அன்னைக்கு நிரந்தர அணிகலனாய் அமைந்து விட்டது = "கற்பக வல்லி நின்"

பாபநாசம் சிவன் = தமிழிசைத் தொண்டர்.
ராகத்துடன் கூடிய பல தமிழ்ப் பாடல்கள் பிரபலமாகத் தந்த மேதை.
அவரிடம் பயின்றவர் ப்ரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயா (அன்னார் அண்மையில் காலமானார்....)

இசை, நடனம் இரண்டிலும் இவர் வித்தகர்!
72 மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் பாடல்கள் புனைந்துள்ளார்; அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்!
பிரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயரைப் பற்றி, மலைநாடான் ஐயா ஒரு சிறப்பு ஒலிப்பதிவு முன்பு இட்டிருந்தார்!
அதில் வீரமணி ஐயர், இந்தப் பாடல் புனைவைப் பற்றித் தானே பேசும் ஒரு வீடியோவும் உள்ளது.
அதை அவசியம் காணுங்கள். சுட்டி இங்கே!

TMS குரலும் இந்தப் பாட்டிற்கு, அப்படியொரு சிறப்பு சேர்த்தது;

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு ராகத்தின் பெயர் வரும்! 
அந்தப் பத்தியை, அந்த ராகத்திலேயே பாடி,
உள்ளத்தைக் கொள்ளை கொண்டது வீரமணி ஐயரா? TMSஆ? :-)

சொல்லப் போனா, நாம எல்லாருமே கூட இந்தப் பாட்டை மிக எளிதாகப் பாடலாம்!
கர்நாடக இசைப் பயிற்சி எல்லாம் ஸ்பெஷலாக ஒண்ணும் தேவையில்லை இதைப் பாட!
அது தான் இந்தப் பாட்டின் சிறப்பு! பாட்டின் எளிமை!

இதை இசைப் பயிற்சியின் போது, மாணவர்களுக்கு துவக்க நிலைப் பாடமாகக் கூட வைக்கலாம்! அப்படி ஒரு எளிமையான சுவை! எங்கே...Hum பண்ணுங்க, இப்போ!


கற்பகத் தாய்!

ஏழிசை மன்னர், TMS பாடுவது = இங்கே!
குன்னக்குடி, அதே பாட்டை = வயலினில் தருவது இங்கே

ஆனா, அதே பாடலை, நாதசுரத்தில் வாசிக்கறாங்க! (Not to Miss!)
------------

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!
(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!

(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

(கற்பக வல்லி)


மயிலாய் மாறி, "அவரே" எனத் தவம் கிடக்கும் "கற்பகம்"

வரிகள்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமலிகை
தாளம்: ஆதி