Monday, December 20, 2021

அம்மா கொஞ்சம் பாரு

 

அம்மா அம்மா அம்மா என்று கூவும் பிள்ளை பாரு

அம்மா எனக்குப் பதிலைச் சொல்லும் நாள் வருமோ கூறு

(அம்மா)

 

(உனக்கு) வயதாகிப் போனதோ? செவியும் மந்தம் ஆனதோ?

நீ ஏறும் சிம்மத்துக்கும் பார்வை மங்கிப் போனதோ?

(அம்மா)

 

பாடிப் பாடிப் பார்க்கின்றேன், பார்வை கிடைக்கவில்லை,

உன் பார்வை கிடைக்கவில்லை

தேடித் தேடிப் பார்க்கின்றேன் தேவி எங்கும் இல்லை,

            என் தாயைக் காணவில்லை

வாடி வாடிப் போகின்றேன் வேருக்குத் தண்ணீர் இல்லை,

            என் தாகம் தீரவில்லை

ஓடி ஓடிக் களைத்து விட்டேன் விதியை வெல்லவில்லை,

            என் மனதில் சக்தி இல்லை

(அம்மா)

 

 --கவிநயா