Monday, August 27, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 5





சுப்பு தாத்தா சஹானா ராகத்தில் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்
.


கருடனில் வலம் வரும் மோகினியே
            கையில் சக்கரம் ஏந்திடும் நாயகியே
உலகத்தின் பந்தங்கள் பற்றுகள் நீக்கி
            ஞானமளித்திடும் உத்தமியே
நற் குண இருப்பிடமானவளே
            இந்த அகிலத்திற் அருள் தரும் திருமகளே
இதயத்திற் கிதம் தரும் இன்னிசை தந்திடும்
            ஏழு ஸ்வரங்களும் பணிபவளே
வானவர் யாவரும் தானவர் அனைவரும்
            வணங்கிடும் எங்களின் வசுந்தரியே
தவத்தினில் சிறந்திட்ட முனிவரும் மனிதரும்
            பணிந்திடும் பாதங்கள் உடையவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை சந்தான லக்ஷ்மியே காத்தருள்வாய்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

Monday, August 20, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 4





ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.


துர்கதி மாற்றி அருள்பவளே
            திரு மாலவன் காதலில் கனிந்தவளே
கேட்டவை எல்லாம் கொடுப்பவளே
            நல்ல சாத்திரங்களின் வடிவானவளே
ரதகஜ துரக பதாதிகள் சூழ்ந்திட
            திகழ்ந்திடும் பாற்கடல் நாயகியே
அண்ட சராசர உயிர்கள் அனைத்துமே
            அன்புடன் பணிந்திடும் தேவதையே
அரியுடன் பிரம்மனும் அரனுடன் தேவரும்
            அடி பணிந்தேத்திடும் அன்னையளே
தாபங்கள் அனைத்தையும் நீக்கியே காத்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை கஜ லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

Monday, August 13, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 3


சுப்பு தாத்தா சிந்து பைரவியில் (சமஸ்கிருதம்) பாடியது இங்கே.  தன் பேரனுடன் நாட்டையில் (தமிழ்) பாடியது இங்கே. மிக்க நன்றி தாத்தா!


ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயே
ஸுரகண பூஜித ஷீக்ர ஃபலப்ரத
ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜனாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தைர்யலக்ஷ்மி சதா பாலயமாம்
.

வெற்றிகளை அளித் தருள்பவளே
            மா விஷ்ணுவின் சக்தியாய் இருப்பவளே
பிருகுவின் புதல்வியாய்ப் பிறந்தவளே
            நல்ல மந்திர ரூபிணி நாயகியே
தேவரும் வணங்கிடும் தேவியளே
            நற் பலன்களை விரைந்தளித் தருள்பவளே
ஞானத்தின் ஒளியினைத் தருபவளே
            அருஞ் சாத்தி ரங்களும் தொழுபவளே
பிறவியின் பயங்களைக் களைபவளே
            எந்தப் பாபமும் போக்கி அருள்பவளே
துறவியர் வணங்கிடும் மோட்சத்தை அளித்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை தைர்யலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

(தொடரும்)

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

Friday, August 10, 2012

தாயின் துதி பாடுவோம்




தாயின் துதி பாடுவோம்

தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !

பதிவிழுங்கிய நஞ்சைக் கற்பால்
                        நெஞ்சில் தடுத்ததேவி!
துதித்திடுவோம் தூயவளே!உன்னைத்
                        தேன்நிறை மலர்தூவி!
காஞ்சிகாமாட்சி, மதுரை மீனாக்ஷி ,
                          நாகை நீலாயதாக்ஷி,
காசி விசாலாக்ஷி என்றெங்கெங்குமுன்
                        கருணைத்திருக்காட்சி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !
குகனின் தாயே ! பறித்தாய் நீ பரமன்
                                         மேனியிலே பாதி;
நிகரில்லாத நாயகி!நீ ஞானமெனும்
                                            நித்தியஜோதி!
நல்லோரின் நலன்காப்பது என்றும்
                                        உந்தன் நன்னீதி ;
எல்லோருமிணைந்தோதுவோம்  பக்தியாய்
                                      உந்தன் அந்தாதி!
தண்மதி சூடும் அபிராமித்தாயே !உன்
சந்நிதியை நாங்கள் நாடி வந்தோம் ;
அன்னபூரணியே! உன் புகழை இனிய
பண்ணமைத்தே நாங்கள் பாடவந்தோம் !





Monday, August 6, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 2


அயிகலி கல்மஷ நாஷினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரனுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸினி
தேவ கணாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தான்யலக்ஷ்மி சதா பாலயமாம்
.


கலியுக தோஷங்கள் களைபவளே
பக்தர் உள்ளங்கள் கவர்ந்திட்ட காமினியே
நான்மறை களின் எழில் வடிவினளே
            நான் மறைகளும் போற்றிடும் தேவியளே
பாற்கடல் கடைகையில் அதன் நடுவினிலே
            உதித்திட்ட மங்கள ரூபிணியே
மந்திரங்களிலே இருப்பவளே
            அம் மந்திரங்கள் போற்றும் மாதவியே
மங்கள வடிவாய்த் திகழ்பவளே
            எழில் பங்கய மலரினில் வசிப்பவளே
தேவர்கள் அனைவரும் பணிபவளே
            அவர்க் கடைக்கலம் தந்து காப்பவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை தான்யலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

(தொடரும்)

Thursday, August 2, 2012

ஆடி வெள்ளிப்பாட்டு

நல்ல சேதி சொல்லாத்தா!
(''மணப்பாறை மாடு கட்டி.."மெட்டில் பாடுவது கலா )

subbusir sings:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HHnj6ZEVPZU

ஆடிக்கூழு ஆக்கி வச்சி,
மாவெளக்கு ஏத்தி வச்சி,
பூவப்போட்டு பூச செஞ்சோம் செல்லாத்தா!--நீ
நேர வந்து நல்ல சேதி சொல்லாத்தா!


காஞ்ச பூமி காத்திருக்கு;
வறண்டு வானம் பாத்திருக்கு;
இருண்டு மேகம் மழை பொழிய வையாத்தா!--கண்ணத்
தொறந்து தாயே!கருண மாரி பெய்யாத்தா!


வயித்துப் பசிக்கு அவிச்ச சுண்டல்,
தவிச்ச வாய்க்குத் தண்ணீப்பந்தல்,
போட்டு ஒன்னக் கும்புடறோம் செல்லாத்தா!--சனத்த
ஆட்டிவைக்கும் வெனைய வெரட்டித் தள்ளாத்தா!


கண்ணுங்க கருணக்காத்து வீச ,
சலங்கக்குலுங்கிச் சிணுங்க வந்து,
பனங்குருத்துத் தோட்டழகி!செல்லாத்தா!--ஊரு
சனங்களுக்கு நல்ல சங்கதி சொல்லாத்தா!