Thursday, June 24, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -4

உபசாரம் - பாகம் 4
(முன்பு மெளலி அண்ணாவின் செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)

முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!



பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


31. தீர்த்தம்

க்ஷீர மேத திதமுத்த மோத்தமம்
ப்ராஜ்ய மாஜ்ய மிதமுஜ்வலம் மது !
மாதரே ததம்ருதோப மம்பய:
ஸம்ரமேண பரிபீய தாம்முஹு !!
பால், ருசியுள்ள தேன், அமிர்தம் ஆகிய இத்தீர்த்தங்களை அன்புடன் அளிக்கிறேன், அருந்துவாயாக.

32. கை அலம்புதல், சந்தனம் அளித்தல்

உஷ்ணோதகை: பானியகம் முகஞ்ச
ப்ரக்ஷால்ய மாத: கல தெளத பாத்ரே !
கர்பூர மிச்ரேண ஸகுங்குமேன
ஹஸ்தெள ஸமுத்வர்த்தய சந்தனேன !!

இந்த ஸ்வர்ண பாத்திரத்தில் கைகளையும், முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குங்குமப்பூ கலந்த சந்தனத்தை கைகளில் பூசிக்கொள்ளுங்கள்.

குடிக்க தீர்த்தம், கை அலம்புதல் மற்றும் சந்தனம் அளித்தலுக்கு சகோதரி கவிநயாவின் பாடல்கள் கீழே!

மூலிகைகள் சேர்த்துவைத்த ருசிமிகுந்த நீரதனை
பசியாறு கையில்நீயும் தாகம்தீர பருகிடுவாய்! (31)
தங்கச்செம்பில் முகர்ந்துவைத்த சிந்துநதி நீரெடுத்து
தந்தக்கைகள் தூய்மைசெய்து சந்தனமும் பூசிக்கொள்வாய்! (32)


33. தீர்த்தம்

அதிசீத முசீரவாஸிதம் தபநீய கலசே நிவேசிதம் !
படபூதமிதம் ஜிதாமிருதம் சுசிகங்கா ஜலமம்ப-பீதயதாம் !!

சுத்தமான வடிகட்டிய வாஸனை பொருந்திய தங்கப்பாத்திரத்தில் உள்ள கங்கை நீரை அருந்துங்கள் தாயே!.

34. கனிவகைகள்

ஜம்ப்வாம்ர ரம்பா பலஸம்யுதானி
த்ராக்ஷா பழ க்ஷெளத்ர ஸமன்வதானி !
ஸநாரி கேளானி ஸதாடி மானி
பலானி தே தேவி ஸமர்ப்பயாமி !!

நாவல், மா, வாழை, திராக்ஷை, மாதுளை போன்ற கனிவகைகளை உங்களுக்குப் பிரியமுடன் அளிக்கிறேனம்மா.

கூச்மாண்ட கோசாதிகஸம் யுதாநி
ஜம்பீர நாரங்க ஸமன்விதாநி !
ஸபீஜபூராணி ஸபாதராணி
பலா நிதே தேவி ஸமர்ப்பயாமி !!

விளாம்பழம், எலுமிச்சை, சாரங்கம்(?), இலந்தைப்பழம் ஆகியவற்றையும் அளிக்கிறேனம்மா.

கனிவகைகள் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றுக்கான தமிழ்ப் பாடல் கிழே!

ஆகாய கங்கைநீரில் ஏலமிட்டு மணக்கவிட்டு
ஆகாரம் முடிந்ததுமே நீயருந்த வேண்டுகின்றோம்! (33)
முக்கனிகள், நாவல்,திராட்சை, கொய்யா,வி ளாம்பழமும்
இலந்தையுடன் மாதுளமும் முக்கண்ணியே ஏற்றருள்வாய்! (34)

35. தாம்பூலம்

கர்பூரேணயுதைர் லவங்க ஸஹிதை: தக்கோல சூர்ணான் விதை:
ஸுஸ்வாதுக்ர முகைர் ஸகெளராதிரை: கஸ்நிக்க ஜாதீபலை: !
மாத: கைதகபத்ர பாண்டுர்சிபி: தாம்பூல வல்லிதளை
ஸாநந்தம் முகமண்ட நார்த்த மதுலம் தாம்பூலமங்கீ குரு !!

பச்சைக்கர்பூரம், லவங்கம், தக்கோலம் சேர்க்கப்பட்ட வெளுப்பான வெற்றிலை, பாக்கை ஆனந்தமாக அளிக்கிறேன் தாயே!

தாம்பூல நிர்ஜித ஸுதப்த ஸுவர்ண வர்ணம்
ஸ்வர்ணாக்த பூகபலமெளக்திக சூர்ணயுக்தம் !
ஸெளவர்ண பாத்ர நிஹிதம் கதிரேண ஸார்த்தம்
தாம்பூலமம்ப வதனாம் புருஹே க்ருஹாண !!

ஸ்வர்ண பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் போன்ற பாக்குப் பொடியையும், முத்துச் சுண்ணாம்பையும் ஏற்றுக் கொள்ளுங்களம்மா.

36. கற்பூரவீடிகள்

ஏலா லவங்காதி ஸமன்விதானி
தக்கோல கற்பூர விமிச்ரிதானி !
தாம்பூல வல்லீதள ஸம்யுதானி
பூசானி தே தேவி ஸமர்ப்பயாமி !!


ஏலம், லவங்கம், பச்சைக்கற்பூரம், பாக்கு ஆகியவற்றை சேர்த்து மடித்த வெற்றிலையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தாம்பூலம், கற்பூர வீடிகளுக்கான தமிழ் பாடல் கீழே!

பசுங்கொழுந்து வெற்றிலையில் பச்சைக் கற்பூரமும்
இலவங்கம்,முத்துச் சுண்ணமுடன் வாசனைப்பாக்கும் சேர்த்து
பக்குவமாய் கூட்டிவைத்து பாங்காக மடித்துத்தர
பரிபுரையே தாம்பூலம் தரும்சிவப்பில் மகிழ்ந்திடுவாய்! (35, 36)

37. ஹாரத்தி

மஹதி கனக பாத்ரே ஸ்தாபயித்வா விசாலான்
டமரு ஸத்ருச ரூபான் பத்தகோதூம தீபான் !
பஹுக்ருத மதேஷு ந்யஸ்ய தீபான் ப்ரக்ருஷ்டான்
புவன ஜனனி குர்வே நித்ய மாரார்த்திகம் தே !!


உலக நாயகியே!, பொற்கிண்ணத்தில் உடுக்கை போன்று கோதுமை மாவால் செய்யப்பட்டுள்ள நெய்திரி கொண்ட தீபங்களால் தினமும் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.

38. ஹாரத்தி

ஸவிநயமத தத்வா ஜாத்யுக்மம் தரண்யாம்
ஸபதி சிரசித்ருத்வா பாத்ரமாரார்தி கஸ்ய !
முககமல ஸமீபே தேம்ப ஸார்த்தம் த்ரிவாரம்
ப்ரமயதிமயீ பூயாத்தே க்ருபார்த்ர: கடாக்ஷ !!


முழங்கால்களை பூமியில் வைத்து, ஹாரத்தி தட்டினை தலைமீது வைத்து உங்கள் முகத்தருகே மும்முறை சுற்றும்போது, உமது அருட்பார்வை என்மீது விழட்டும்.

இருவித ஹாரத்திக்குமான தமிழ் பாடல் கீழே!

புத்தரிசி ஊறவைத்து அச்சுவெல்லம் சேர்த்திடித்து
புத்துருக்கு நெய்ஊற்றி மாவிளக் காய்ஏற்றி (37)
தங்கத்தாம் பாளத்திலே கற்பூர தீபமேற்றி
தாயுன்னைச் சுற்றிவர தாரகையே அருள்புரிவாய்! (38)

39. தக்ஷிணை

அத பஹுமணி மிச்ரை: மெளக்தி கைஸ்த்வாம் விகீர்ய
த்ரிபுவன கமநீயை: புஜயித்வா ச வஸ்த்ரை: !
மிலித விவித முக்தாம் திவ்ய மாணிக்ய யுக்தாம்
ஜனனி கனக வ்ருஷ்டிம் தக்ஷிணாம் தே அர்ப்பயாமி !!

பல மணிகளுடன் கலந்த முத்துக்களை இறைத்து, முவ்வுலகிலும் அழகான வஸ்த்ரங்களால் அலங்கரித்து, பலவகை மாணிக்கங்களுடன் சுவர்ணத்தை தக்ஷிணையாகத் தருகிறேன்.

பசும்பொன்னால் பாளங்களும், முத்து,பவளம், மாணிக்கமும்,
புட்பராகம், மரகதமும் வைரம்,வை டூரியமும்,
கோமதக இரத்தினமும் வர்ணஜாலம் காட்டிவர
காணிக்கையாய் தருகின்றோம் கௌமாரி ஏற்றருள்வாய்! (39)

40. குடை

மாத: காஞ்சதண்ட மண்டடிதமிதம் பூர்ணேந்து பிம்பப்ரபம்
நானாரத்ன வீசோபுஹேம கலசம் லோகத்ரயாஹ்லாதகம் !
பாஸ்வன் மெளக்திக ஜாலிகாபரிவிருதம் ப்ரீத்யாத் மஹஸ்தேத்ருதம்
சத்ரம் தேபரிகல்பயாமி சிரஸி த்வஷ்ட்ராஸ் வயம் நிர்மிதம் !!

தங்கப் பிடியுள்ளதும், சந்திர காந்தி உள்ளதும், முத்துக்கள் வரிசையாகத் தொங்குவதுமான குடையை அன்புடன் அளிக்கிறேன்.

வெண்நிலவின் தண்மைதரும் வெண்பட்டுத் துணிபோர்த்தி
பெண்மகளின் மனம்மகிழ பொன்கம்பி யுடன்கோர்த்து
பனிமுத்துப் பரல்பதித்த வெண்கொற்றக் குடையதனை
கனிவுடனே பிடிக்கின்றோம் கற்பகமே குளிர்ந்தருள்வாய்! (40)

Thursday, June 10, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -3

உபசாரம் - பாகம் 3 (முன்பு செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)
முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!


தமிழ்பாடல்களை திரு கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார். அந்த லிங்க் கீழே!.


Annaikku_64_Upacha...



21. திலக பூஜை

மாத:பாலதே தவாதிவிமலே காஷ்மீர கல்தூரிகா
கர்பூராகருபி: கரோமி திலகம் தேஹேங்காரகம் தத: !
வக்ஷோஜாதீயக்ஷகர் கமரஸம் ஸிக்வாச புஷ்பத்ரவம்
பாதெள சந்தன லேபநாதிபிரஹம் ஸம்பூஜயாமி க்ரமாத் !!

நெற்றியில் குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைகற்பூரம், அகரு முதலியவைகள் கலந்த கலவையால் திலகமிட்டு, மார்பிலும், பாதங்களிலும் சந்தனக் குழம்பைப் பூசி பூஜிக்கிறேன்.

கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம் சேர்திலகம்
கன்னிநல்லாள் கனிவுடனே அணிந்துகொள்ள தந்துவிட்டு
உரைத்துவிட்ட சந்தனத்தை நெஞ்சகத்தில் பூசிவிட்டு
கரைத்தெடுத்து கொஞ்சமதை பாதங்களில் தடவிவிட்டு (21)

22. அக்ஷதார்ச்சனை

ரத்னாக்ஷதைஸ்தவாம் பரிபூஜையாமி
முக்தாபலைர் வாருசிரை ரவித்தை: !
அகண்டிதைர் தேவியவாதிபிர்வா
கம்பீர பாங்காங்கித தண்டுலைர்வா !!

ரத்னமயமான அக்ஷதைகளாலும், துவாரம் இல்லாத முத்துக்களாலும் முனை முறியாத குங்குமப் பூ கலந்த அரிசியாலும் உம்மை பூஜிக்கிறேன்.

நவநவமாய் நல்முத்து ஒளிவீசும் இரத்தினங்கள்
குங்குமப்பூ கலந்துவைத்த புத்தம்புது பச்சரிசி
அத்தனையும் சேர்த்தெடுத்து அன்புடனே அடிபணிந்து
அர்ச்சனைகள் செய்யுகின்றோம் அம்பிகையே ஏற்றருள்வாய்! (22)

23. சந்தனம்

ஜனனி சம்பக தைல மிதம் புரோ
மருகமதோபயுதம் படவாஸகம் !
ஸுரபி கந்த மிதஞ்ச சதுஸ்ஸமம்
ஸபதி ஸர்வமிதம் பரிக்ருஹ்யதாம் !!

தாயே!, சம்பக-தைலம், கஸ்தூரி வாசனைப் பொடி, வாஸனை கந்தம் முதலிய சந்தனாதி உபசாரங்களை ஏற்றுக்கொள்வாயாக.

24. ஸிந்தூரம்

ஸீமந்தேதே பகவதி மாயாஸாதரம் ந்யஸ்தமேதத்
ஸிந்தூரம் மே ஹ்ருதய கமலே ஹர்ஷ வர்ஷம் தநோதி !
பாலாதித்ய த்யுதிரிவ ஸதா வோஹிதா யஸ்யகாந்தி
ரத்தர்த்வாந்தம் ஹரதி ஸகலம் சேதஸா சிந்தயைவ !!

உமது வகிட்டில் நான் இட்ட ஸிந்தூரம் காணப்படுவது எல்லையில்லா சந்தோஷத்தைத் தருகிறது. பாலசூரியனைப் போல எனது மனத்திருளையும் போக்குகிறது.
சந்தனம், சிந்தூரம் ஆகிய இரண்டு உபசாரங்களுக்குமான தமிழ் பாடல் கீழே!

சண்பகத்தின் தைலமுடன் கஸ்தூரி சந்தனமும்
சண்டியுந்தன் மேனியிலே விலேபனம் செய்துவிட (23)
காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே
இளங்கதிரைப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட (24)

25. புஷ்பம்

மந்தார குந்த கரவீர லவங்க புஷ்பை:
த்வாம் தேவி ஸந்ததமஹம் பரிபூஜயாமி !
ஜாதிஜபா வகுள சம்பக கேதகாதி
நாதவிதாதி குஸுமானி க தேநர்பயாமி !!

மந்தாரம், குருக்கத்தி, வைங்கம், அரளி புஷ்பங்களால் உங்களைப் பூஜிக்கிறேன். ஜாதிப்பூ செவ்வரத்தை, மகிழம்பூ, சம்பகப்பூ, தாழம்பூ முதலிய புஷ்பங்களால் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

மந்தாரை மலரோடு சாதி, சண்பகமும்
மகிழம்பூ, தாழம்பூ, முல்லை, மல்லிகையும்
மலைவாழை நாரெடுத்து மணமுடனே தொடுத்துவைக்க
மந்திர ரூபிணியே மாலைசூட்டி மகிழ்ந்திடுவாய்! (25)

26. புஷ்பார்ச்சனை

மாலதீ வகுள ஹேம புஷ்பிகா காஞ்சதார கரவீர கேதகை:
கர்ணிகார கிரிகர்ணி காதபி: புஜயாமி ஜகதம்ப தேவபு: !
பாரிஜாத சதபத்ர பாடலைர் மல்லிகா வகுள சம்பகாதிபி
அம்புஜை: ஸுகுஸுமைச்ச ஸாதகம் பூஜயாமி ஜகதம்பவபு: !!

அம்மா!, ஜாதிப்பூ, மகிழம்பூ, மந்தாரை, கொன்றை, முதலிய மலர்களாலும், பாரிஜாதம், தாமரை, பாடலம், மல்லிகை, சம்பகம் ஆகியவற்றாலும் உம்மைப் பூஜிக்கிறேன்.

நர்மதையின் நீர்பாய்ச்சி நந்தவனம் தான்அமைத்து
நறுமணங்கள் கமழுகின்ற பலமலர்கள் சேகரித்து
மருவோடு மருக்கொழுந்தும், பாரிஜாதம், பாடலமும்
தாமரையும் சேர்த்துச்செய்யும் பூசனைகள் ஏற்றருள்வாய்! (26)

27. தூபம்

லாக்ஷாஸம்மிளிதை: ஸிதாப்ரஸஹிதை: ஸ்ரீவாஸஸம் மிச்ரிதை:
கர்பூராகலிதை: சிரை: மதுயுதை: கோஷார்பிஷா லோடிதை: !
ஸ்ரீகண்டாகரு குக்குலுப்ரபிருதிபி: நானாவிதைர் வஸ்துபி:
தூபம் தே பரிகல்பயாமி ஜனனி ஸ்தேஹரத் த்வமங்கீ: !!

சந்தனம், கற்பூரம், அக்ரு, தேன், பசுநெய் இவற்றுடன் குக்குலூ முதலிய வாசனை பொருட்களைச் சேர்த்து தூபம் காட்டுகிறேன் தாயே.

28. நீராஜனம்

ரத்னாலங்கிருத ஹேமபாத்ர நிஹிதை: கோஸர்பிஷா லோடிகை:
தீபைர் தீர்க்கதராத்தகார பிதுரை: பாலார்க்க கோடிப்ரபை: !
ஆதாம் ரஜ்வலதுஜ்வல ப்ரவிலஸத் ரத்ன ப்ரதீபைஸ்ததா
மாதஸ்தவா மஹமாதராத நுதினம் நீராஜயாம் பூர்சகை: !!

தங்கப் பாத்திரத்தில், பசும் நெய்யால் நனைக்கப்பட்ட திரிகளையுடைய தீபங்களால் தினமும் உமக்கு நீராஜனம் செய்கிறேனம்மா.

தூபம் மற்றும் தீப உபசாரங்களுக்காக கவிநயா அவர்கள் எழுதியது கீழே!

சந்தனம், கற்பூரம், குக்குலுவும், அகரு சேர்த்து
செந்தணலில் புகைக்கவிட்டு சாம்பவிக்கு தூபமிட்டு (27)
பாதம்நாளம் கொண்டிருக்கும் தங்கபாத் திரங்களிலே
பசுநெய்யில் திரிநனைத்து பலவிதமாய் தீபமிட்டு (28)

29 நைவேத்யம்

மாதஸ்த்வாம் ததிதுக்தபாயஸ மஹாசால்யன்ன ஸந்தானிகா:
ஸூபாபூப ஸீதாக்ருதை: ஸவடகை: ஸக்ஷெளத்ர ரம்பாபலை
ஏலா ஜீரக ஹிங்கு நாகரநசாகுஸ்தும்பரீ ஸம்ஸ்க்ருதை
சாகைஸ்ஸாகமஹம் ஸுதாதி கரஸை: ஸந்தர்ப்பயாம் யர்சனை: !!

தயிர், பால், பாயஸம், சக்கரைப் பொங்கல் முதலியவைகளையும், பருப்பு, வடை, அதிரசம், தேன் கலந்த பழங்கள், ஏலக்காய், ஜீரகம் ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்டஉணவு வகைகளையும் உமக்கு அளிக்கிறேனம்மா.

பாலோடு பாயஸமும் சர்க்கரையில் பொங்கலிட்டு
தேனூறும் கனிகளுடன் செந்தேனும் கலந்துவிட்டு
பலவகையாய் சித்ரான்னம் பக்குவமாய் சமைத்துவைத்து
பக்தியுடன் படைக்கின்றோம் பத்மாக்ஷி உனக்காக! (29)

30. பக்ஷணங்கள்

ஸாபூப ஸூபததிதுக்த ஸிதாக்ருதானி
ஸுஸ்வாது பக்த பரமான்ன புரஸ்ஸராணி !
சாகோல்லஸன் மரிசி ஜீரக பால்ஹிகானி
பக்ஷ்யாணி புங்க்ஷ்வ ஜகதம்ப மயார்பிதானி !!

வடை, பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்த ருசி மிக்க பக்ஷணங்களையும், மிளகு, ஜீரகம், குங்குமப்பூ சேர்த்த காய் வகைகளையும் அளிக்கிறேன், உண்ணவேண்டுமம்மா நீங்கள்.


லட்டோடு அதிரசமும் பருப்போடு இனிப்புருண்டை
வடையோடு பலப்பலவாய் பலகாரம் பட்சணங்கள்
பொடித்தவெல்லம் சேர்த்துச்செய்த திரட்டுப்பால் அத்தனையும்
தித்திப்பாய் தருகின்றோம் திரிபுரையே ஏற்றருள்வாய்! (30)