Sunday, August 11, 2024

ஆடியிலே வருவாள்

 


ஆடியிலே வருவாள்
ஆனந்தம் தருவாள்
(ஆடியிலே)

கோடித் துன்பம் வந்த போதும்
நாடி அவளைப் பணிந்து விட்டால்
(ஆடியிலே)

பாடப் பாட அவள் புகழை
பேசப் பேச அவள் மகிமை
தேடத் தேடத் திருவடியை
ஓடி வந்து அருளிடுவாள்
(ஆடியிலே)

அன்னை என்று அழைத்து விட்டால்
அகம் மகிழ்ந்து வந்திடுவாள்
பிள்ளையென அரவணைப்பாள்
பேரன்பைத் தந்திடுவாள்
(ஆடியிலே)

--கவிநயா