Monday, November 9, 2015

காத்திருக்கேன்...

தீபாவாளி கொண்டாட்டத்துக்கிடையிலும் சுப்பு தாத்தா அன்புடன் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!



குஞ்சுக் குருவி என்ன
கூட்டுக்குள்ள விட்டுப்புட்டு
நீ மறஞ்சு போனதென்ன ஞாயமா??

பறக்கவும் ஏலாம
நடக்கவும் ஏலாம
வானம் பாத்துக் காத்திருக்கேன் நானம்மா!

காத்தடிக்கும் தெசையெல்லாம்
அலையுற கொடிபோல
கலையுற எம் மனசப் பாரம்மா

கொடி தாங்கும் மரமாக
மடி தாங்க வருவேன்னு
நொடி எண்ணிக் காத்திருக்கேன் நானம்மா!

தண்ணி விட்டுத் தத்தளிக்கும்
மீனப் போல ஒம் மகளும்
ஒன்ன விட்டுத் தத்தளிப்பது ஞாயமா?

உயிர் துடிக்கும் மீனக் காக்க
ஓடோடி வருவாயின்னு
ஓயாமக் காத்திருக்கேன் நானம்மா!



--கவிநயா 

(சில வருஷங்களுக்கு முன் எழுதிய பாடல்)

No comments:

Post a Comment