Tuesday, December 15, 2015

மலர் முகம்

மனமெல்லாம் உந்தன் மலர் முகமே
நினைவெல்லாம் உலவி சுகந் தருமே
(மனமெல்லாம்)

மதி முகம் மனதிற்கு ஒளி தருமே – உன்னைக்
கதியெனக் கொண்டவர்க்குக் களி தருமே
(மனமெல்லாம்)

சிந்தையில் நின்றாடும் சிவை பதமே
சிந்திப் பவர்க்குத் தரும் அருள் நிதமே
பந்தங்கள் விட்டு அவள் பொற்பதமே
பற்றிக் கொண்டால் நடக்கும் அற்புதமே
(மனமெல்லாம்)


--கவிநயா 

No comments:

Post a Comment