Monday, July 25, 2016

காமாக்ஷி தாயே!


கீதா ரங்கன் அம்மா குந்தல வராளி ராகத்தில் இனிமை ததும்பப் பாடியது. மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!




காமாக்ஷி தாயே

கருணை செய்வாயே

(காமாக்ஷி)



காஞ்சியிலே வீற்றிருந்து

கண்களினால் ஆட்சி செய்யும்

(காமாக்ஷி)



கஞ்ச மலர்ப் பாதங்கள்

நெஞ்சினிலே ஒளிர்ந்திடவும்

விஞ்சும் அன்பின் காரணத்தால்

விழிநீர் பெருகிடவும்

(காமாக்ஷி)



நாவினிக்க உன் நாமம்

நாளும் நவின்றிடவும்

பாவினிக்க உன்புகழைப்

பண்ணில் வைத்துப் பயின்றிடவும்

(காமாக்ஷி)


--கவிநயா 


No comments:

Post a Comment