Monday, November 21, 2016

அம்மா என்றுனை அழைக்க....




சிவரஞ்சனி ராகத்தில் கீதாம்மாவின் குழையும் குரலில் 

அம்மா என்றுனை அழைக்க

அன்பால் என் நா மணக்க

வருவாயே மனம் இனிக்க

அருள்வாயே உளம் களிக்க

(அம்மா)



அகிலங்கள் யாவையுமே

ஆக்கிய என் அருமைத் தாயே

புவனங்கள் யாவிலுமே

பூத்திருக்கும் பூவை நீயே

(அம்மா)



பிறவியிது உனதருளாலே

இன்ப துன்பம் உனதருளாலே

உன் நினைவு உனதருளாலே
உனைப் பாடுவதும் உனதருளாலே

(அம்மா)


--கவிநயா 


No comments:

Post a Comment