Monday, April 24, 2017

கலைகளின் ராணி!


கீதாம்மா தன் இனிய குரலில்...மோஹனம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

கலைகளின் ராணி கலைவாணி, வெள்ளைக்
கமலத்திலே இருந்து அருள் வேணி
(கலைகளின்)

நாத வடிவானவளே நா மகளே, உந்தன்
பாதங்களை அன்றி வேறு ஏது புகலே?
(கலைகளின்)

வெள்ளை மலரில் ஒரு வெள்ளி நிலவே, எந்தன்
உள்ள மடுவில் உறையும் கொள்ளை எழிலே
அறியாமை தன்னை அழித்திடுவாய், உண்மை
அறிந்திடவே ஆற்றல் அளித்திடுவாய்
(கலைகளின்)


--கவிநயா


No comments:

Post a Comment