Monday, October 30, 2017

என்னுலகம் நீயே!




சுப்பு தாத்தா வின் இசையில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா உன்னைக் கண்டால் போதும்

ஆசையெல்லாம் தீரும்

சும்மா உன்பேர் சொன்னால் போதும்

பிறவியும் கரை சேரும்

(அம்மா)



உன் நினைவில் வாழுகிறேன்

என்னுலகம் நீயே

உன் புகழைப் பாடுகிறேன்

என் மொழியும் நீயே

(அம்மா)



காடு வீடு இல்லம் துறவு

எல்லாம் இங்கு ஒன்றே

நாடுவது உன் பதமே

என்றால் மிக நன்றே



உன் விழியில் காணுகிறேன்

கருணை என்னும் கடலே

உன்னடிகள் தந்திடுமே

தங்க எனக்கு நிழலே

(அம்மா)


--கவிநயா 

No comments:

Post a Comment