கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
ஊஞ்சலாடி வருகின்றாள்
உலக நாயகி, நம்மை
வாஞ்சையோடு காக்கும்
எங்கள் தையல் நாயகி
பொன்னூஞ்சல் ஆடி
வரும் புவன நாயகி, நம்மை
பாசமுடன் காக்கும்
எங்கள் நேச நாயகி
(ஊஞ்சலாடி வருகின்றாள்)
ஆடி வரும் அவள்
அழகில் உலகம் மயங்கும், அவளை
பாடிப் பாடிக்
திளைப்பதிலே உள்ளம் மகிழும்
கூடுகின்ற பக்தர்
கூட்டம் கொண்டாடி வணங்கும், பல
கோடிக் கண்ணும்
போதாது போல் அவள் எழில் விளங்கும்
(ஊஞ்சலாடி வருகின்றாள்)
மாடு மனை வீடு
சுற்றம் எல்லாம் தருவாள், அவளை
நாடி விட்டால்
பிறவி இல்லாப் பேறும் தருவாள்
கூவி அம்மா என்றழைத்தால்
ஓடி வருவாள், அவளைக்
கொஞ்சிக் கொஞ்சி
அழைத்தாலோ குழைந்து விடுவாள்
(ஊஞ்சலாடி வருகின்றாள்)
--கவிநயா
No comments:
Post a Comment