Monday, December 25, 2017

உலகேழும் பூத்தவள்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

விழி நீரில் விளையாடும் வெள்ளன்னமே
பொழி அன்பில் எங்கெங்கும் அருள் தங்குமே
(விழி)

ஓரவிழிப் பார்வையாலே உலகேழும் பூத்தவளே
கோலவிழிப் பார்வையாலே கருணை கொண்டு காப்பவளே
(விழி)

உன் நினைவில் வாழும் போது துன்பம் மறைந்து போகுதம்மா
உன் நினைவில் ஆழும் போது இன்பம் நெஞ்சில் பொங்குதம்மா
இன்ப துன்பம் எது வந்தாலும் உன் நினைவு ஒன்றே வேண்டும்
நெஞ்சில் எழும் அலைகள் யாவும் உன் புகழே பாட வேண்டும்

(விழி)


--கவிநயா

No comments:

Post a Comment