Tuesday, February 20, 2018

கற்பகத் தாயே!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கற்பகத் தாயே கதி நீயே
பொற்பதம் தந்தெமைக் காப்பாயே
(கற்பக)

மயிலாபுரி வந்தாய் மயிலாக
கயிலாபுரி அழகி ஒயிலாக
(கற்பக)

திருவடி மலரினை தினந்தினம் நுகர்ந்திடவும்
திருப்பெயரின் ருசி நாவினில் திகழ்ந்திடவும்
பல நாள் உனை அழைத்தேன் பலவாறாய்
நீ அதனைக் கேட்டுன் முழுமதி முகம் காட்டு
(கற்பக)


--கவிநயா

2 comments:

  1. marked u absent last week but xqsd u bcos this one is too beautiful

    ReplyDelete
  2. ஊருக்குப் போயிருந்தேன் அம்மா. தாத்தா பதிவிட்டிருந்தாரே!

    ReplyDelete