Tuesday, May 28, 2019

அன்னை சக்தி!


துயரமெல்லாம் மாற்றிடுவாய் துர்கா பரமேஸ்வரி
துன்பமெல்லாம் ஓட்டிடுவாய் தாயே புவனேஸ்வரி
(துயரமெல்லாம்)

அண்டமெல்லாம் பூத்தவளே அன்னையெனக் காப்பவளே
அண்டி வரும் அடியவர்க்கு அபயந்தரும் உமையவளே
(துயரமெல்லாம்)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற ஆதி சக்தியே, கருத்த
கண்டனுள்ளம் கவர்ந்திழுக்கும் காந்த சக்தியே
பண்ணில் உந்தன் புகழைப் பாட மகிழும் சக்தியே, எம்மைக்
கண்ணிமை போல் காத்தருளும் அன்பு சக்தியே
(துயரமெல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment