Tuesday, June 11, 2019

அகிலாண்டேஸ்வரி


அம்மா என்றுனை அழைத்தேன் அகிலாண்ட நாயகியே
ஆதி பரமேஸ்வரியே அன்னை புவனேஸ்வரியே
(அம்மா)

அன்புடன் அழைப்பவரின் மனதினில் குடி புகுவாய்
அடைக்கலம் தந்தவர்க்கு அனுதினம் அருள் பொழிவாய்
(அம்மா)

முந்தை வினை விரட்டி மோகம் அகற்றிடுவாய்
எந்தைச் சிவனோடு எந்தன் சிந்தையில் அமர்ந்திடுவாய்
சந்தம்மிகு செந்தமிழில் பாடுகிறேன், வருவாய்
சொந்தமென உன்னைக் கொண்டேன், சுந்தரியே அருள்வாய்
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment