Monday, December 9, 2019

நிலவு முகம்



நிலவு முகம் கண்டேன்
நெளியும் முறுவல் கண்டேன்
கடலெனவே விரிந்திருக்கும்
கருணை அதில் கண்டேன்
(நிலவு)

அகிலமெல்லாம் ஆக்கி வைத்த ஆதிசக்தி அவளே
உயிருக்கெல்லாம் உணவளிக்கும் அன்னபூரணி அவளே
தர்மத்தினை நிலைநாட்டும் மகாராணி அவளே
அதர்மத்தை அழித்தொழிக்கும் மாகாளியும் அவளே
(நிலவு)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற வேத ரூபிணி
கண்ணைப் போல நம்மைக் காக்கும் மீன லோசனி
அண்டியோர்க்கு அஞ்சலென்று அபயம் தருபவள், தன்னை
நம்பியோர்க்கு நன்மையெல்லாம் அள்ளித் தருபவள்
(நிலவு)



--கவிநயா

2 comments:

  1. வாசித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete