Monday, January 13, 2020

அம்மா, வா!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
அன்னையின் அருள் போலப் பொங்கலும் பொங்கட்டும்!


அம்மா உந்தன் நினைவில் உயிர் வாழுகிறேன்
பண்ணில் உனைப் புனைந்து தினம் பாடுகிறேன்
(அம்மா)

கண்ணோடும் கருமணியோ, பண்ணோடும் கருப்பொருளொ,

வானோடும் வெண்ணிலவோ, தேனோடும் தீஞ்சுவையோ
(அம்மா)

இதயத்தில் உன்னை வைத்து, புதையலைப் போலக் காத்தேன்

மதிமுகப் பெண்ணே நீயே கதியென ஆகி விட்டேன்

தாலாட்டுப் பாடி எந்தன் துன்பம் தீர்க்க வா

பாராட்டிப் பாடும் எந்தன் பாடல் கேட்க வா
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment