Tuesday, April 14, 2020

வா அம்மா!

அனைவருக்கும் இனிய சார்வரி புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் கொரோனாவால் ஏற்பட்ட துன்பம் நீங்கி உலகம் உய்ந்திட, அன்னையின் அருளை வேண்டுவோம் 🙏

அபிராமியாய்... சிவகாமியாய்...
அபிராமியாய்... சிவகாமியாய்...
மீனாக்ஷியாய்,  காமாக்ஷியாய்
வி சாலாக்ஷியாய், வெக்காளியாய்
கருணை மழை பொழியும் கருமாரியாய்

ஆங்காரியாய்... ஓங்காரியாய்...
அண்டங்கள் ஆக்கி வைத்த ஆதிசக்தியாய்
இளம் பாலையாய், எழில் கன்னியாய்
இடத்தினில் சிவனாரின் சரிபாதியாய்

புவனங்கள் யாவையும் பூத்துக் காக்கின்ற புவனேஸ்வரி
மூவரும் தேவரும் முனிவரும் வணங்கிடும் ராஜேஸ்வரி
ஜெகத்தினில் நிறைந்து இதயத்தில் உறைந்திடும் ஜெகதீஸ்வரி
உலகம் அனைத்தையும் உயிராய்க் காத்திடும் மாதேஸ்வரி

தேவரைக் காத்திட அசுரரை மாய்த்திட இரங்கி வந்த தாயே
தேடிடும் அடியவர் நாடிடும் அரும் பொருள் அன்பு அன்னை நீயே
பலப் பல ஊர்களில் பலவித நாமங்கள் கொண்டவள் நீயம்மா
அம்மா என்றுனை அழைத்திடும் கன்றின் குரலுக்கு வா அம்மா


--கவிநயா

No comments:

Post a Comment