Monday, April 5, 2021

பதமன்றி கதியில்லை

 

உன்னிரு காலில் உடல்விழ வேண்டும்

உள்ளத்தில் நீயே நிலைபெற வேண்டும்

உருகி உருகி உன்னைத் தொழுதிட வேண்டும்

அருகில் அருகில் வந்து அருளிட வேண்டும்

(உன்னிரு)

 

எத்தனை கோடி கருவினில் இருந்தேன்

எத்தனை பிறவியுன் நினைவின்றித் திரிந்தேன்

இப்பிறவியில் உன்றன் நினைவினை அடைந்தேன்

பொற்பதமன்றி கதியில்லை உணர்ந்தேன்

(உன்னிரு)

 

பற்றெல்லாம் விட்டு விட்டு உன்னைப் பற்ற வேண்டும்

தொட்டதும் தொடர்வதும் உன்நினை வாக வேண்டும்

விட்டதும் விடுவதும் இருவினை யாக வேண்டும்

நற்றமிழால் உன்னை அனுதினம் பாட வேண்டும்

(உன்னிரு)



--கவிநயா


No comments:

Post a Comment