Monday, May 17, 2021

சலனமா, சஞ்சலமா?

 

சலனம் வேண்டாம் சஞ்சலம் வேண்டாம்

அனைத்தும் துறந்திடுவாய் என் மனமே

கவலை வேண்டாம் கண்ணீரும் வேண்டாம்

அனைத்தும் மறந்திடுவாய் என் மனமே

(சலனம்)

 

அன்னை அவள் பதமே நிரந்தரமே

அறிவாய் அறிந்தாலே சுகம் வருமே

(சலனம்)

 

அவள் திருநாமத்தை மனதினில் நடுவாய்

அனுதினம் அன்பூற்றி அதனை வளர்ப்பாய்

நம்பிக்கை எனும் வேலி சுற்றியிட்டுக் காப்பாய்

வந்தித்து அவள் புகழைப் பாமாலையில் கோப்பாய்

(சலனம்)



--கவிநயா


No comments:

Post a Comment