Monday, May 13, 2013

நெஞ்சில் வந்த சந்தம்




சந்தம் ஒன்று வந்து என்றன் நெஞ்சினிலே 
நின்றது நின்றதம்மா
சங்கத் தமிழினில் சிந்து ஒன்று பாட 
வந்தனம் தந்ததம்மா

ஓடி வந்த தென்றல் மூங்கில் துளை வழி
மெட்டொன்று தந்ததம்மா
பாடி வரும் சின்னக் குயில் போலெனக்கு
பாட்டொன்று வந்ததம்மா

தேடி உன்னைக் காண நாடி வந்து நாவில்
நர்த்தனம் செய்ததம்மா
ஆடி வரும் வண்ண மயிலைப் போல்மனம்
ஆட்டங்கள் போட்டதம்மா

துள்ளி வருகின்ற மானினம் போல்தமிழ்
துள்ளியே வந்ததம்மா
கள்ளிருக்கும் பூவைப் போலவே விரிந்து
தீங்கவி தந்ததம்மா

செல்லம் உன்னைப் போற்றிப் பாடப் பாடமனம்
வெல்லமாய் தித்திக்குதே
கள்ளம் இல்லாப் பிள்ளை வெள்ளை உள்ளம் எங்கும்
கள்ளூறிக் கிடக்குதே

கண்ணே கண்மணியே கற்கண்டே என்றுன்னைக்
கொஞ்சிக்கொஞ்சி மகிழ்வேன்
காலமெல்லாம் தமிழ்ப் பாக்களால் உனக்கு
மாலைசூட்டி மகிழ்வேன்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/01/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80/

5 comments:

  1. இனிமையான ரசிக்க வைக்கும் பாடல்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=ExNui1ceoN0

    ReplyDelete
  3. எது சரி?


    option 1)எழிலரசியைப்பாடுவதால் கவிநயாவின் வரிகளில் அழகு மேலும் கூடிவிட்டது

    option 2)கவிநயாவின் வரிகளால் எழிலரசியின் அழகு மேலும் கூடிவிட்டது


    விடை :1,2 (இரண்டுமே சரி!)

    ReplyDelete
  4. U have not listened to the song Madam Kavinaya as yet?
    http://www.youtube.com/watch?v=ExNui1ceoN0
    subbu thatha.

    ReplyDelete
  5. U have not listened to the song Madam Kavinaya as yet?
    http://www.youtube.com/watch?v=ExNui1ceoN0
    subbu thatha.

    ReplyDelete