Monday, January 13, 2014

காமினியே, ஜகன் மோகினியே!

அனைவருக்கும் மனம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

முன்பு ஒரு முறை நித்யஸ்ரீ அவர்கள் பாடிய ஜனனி ஜனனி என்னும் பாடலின் சுட்டியை சுப்பு தாத்தா அனுப்பியிருந்தார். மிகவும் பிடித்த அந்தப் பாடலின் மெட்டிலேயே எழுதியது... நீங்களும் பாடிப் பார்த்து, பதிவு செய்து எனக்கும் அனுப்புங்களேன்...



சக்தி சக்தி சக்தி
சிம்மவாஹினி மாலினி சூலினியே
சக்தி சக்தி சக்தி
புவிபூத்ததைக் காத்துப் பின்கரந்தவளே
சக்தி சக்தி சக்தி

லீலை பலபுரியும் லலிதாம்பா
காலைப் பிடித்தோமே... காத்தே அருள்வாயே…அம்மா

(சக்தி சக்தி சக்தி)

கயிலை நாதனுடன் கலந்து மகிழ்பவளே காமினியே ஜகன் மோகினியே
மயிலை நகரதனில் தோகை மயிலாகி நாதனை வணங்கினையே

காமேச்வரி தாயே… காத்தருள்வாய் நீயே…
சிதம்பர நாதனின் நாயகியே! சர..ணம் சர..ணம் சரணம் அம்மா!

(சக்தி சக்தி சக்தி)


--கவிநயா

6 comments:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
    மலரட்டும் ......

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள்.

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி தனபாலன்.

      Delete