Tuesday, May 12, 2015

அபிராமி!அருள்வாய் நீ!


அபிராமி!அருள்வாய் நீ!
(மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக மெட்டில் பாடலாம் .)


இடர்களைநீக்கித் தடங்கல் தகர்க்குங்
கடவுளாம் கணபதியின் தாயே!
விடமுண்டகண்டனின் இடப்பாகந்தனில்
இடம்பிடித்தமர்ந்த மகாமாயே!
கருவையுங்காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகே ,
குருகுக ஜனனி ,காத்யாயினி,
திருக்கடவூர் அமர் அன்னை அபிராமி,
கருணையோடிங் கெழுந்தருள்வாய்நீ !

முராரிசகோதரி,புராரிமனோகரி,
பரமேஸ்வரி,பவதாரிணி!
பர்வதராஜகுமாரி,கௌரி,
சர்வேச்வரி,சுகதாயினி!
சாரதே,சாமளே ,சாம்பவி,ஷாலினி,
சாகம்பரி,திருசூலினி!
நாராயணி,நவதுர்க்கே,நீலி,
பேரருள் பொழிந்திட வருவாய் நீ!

No comments:

Post a Comment