Monday, September 19, 2016

காசி நகர் மாதரசி!




கீதாம்மாவின் இனிய குரலில்....  மிக்க நன்றி கீதாம்மா! 

காசி நகர் மாதரசி

கனிவு மிகு பேரரசி

அகன்ற கரு விழிகளினால்

அருள் பொழியும் அன்பரசி



மன்னன் விஸ்வநாதனுடன்

மங்களமாய் வீற்றிருப்பாள்

விசாலாக்ஷி என்ற பெயர்

கொண்டுலகம் காத்திருப்பாள்



மலரடிகள் பற்றி விட்டால்

மனமயக்கம் தீர்த்திடுவாள்

மரணபயம் நீக்கிடுவாள்

பிறவிப் பயன் தந்திடுவாள்


--கவிநயா 


No comments:

Post a Comment