Monday, April 10, 2017

வேண்டும்!




கீதாம்மா தன் இனிய குரலில்...மிக்க நன்றி கீதாம்மா!

ஒரு வரம் தர வேண்டும்
நினைவினில் வர வேண்டும்
நினைவுக்குள் நிலையாக
நீ அமர்ந்திட வேண்டும்

நாவினில் உன் நாமம்
தினம் தவழ்ந்திட வேண்டும்
சுகம் உந்தன் பதமென்று
மனம் உணர்ந்திடல் வேண்டும்

கனி முகம் என் நெஞ்சில்
களி மிகத் தர வேண்டும்
விழி யிரண்டின் ஓரம்
வழிகின்ற நீர் வேண்டும்

அன் பனைத்தும் உனக்காய்
அள்ளி யள்ளித் தர வேண்டும்
வாழ்வே உந்தன் சேவையாக
வாழும் மன நிலை வேண்டும்


--கவிநயா

2 comments:

  1. நாவினில் உன் நாமம்
    தினம் தவழ்ந்திட வேண்டும்
    சுகம் உந்தன் பதமென்று
    மனம் உணர்ந்திடல் வேண்டும்

    கனி முகம் என் நெஞ்சில்
    களி மிகத் தர வேண்டும்
    விழி யிரண்டின் ஓரம்
    வழிகின்ற நீர் வேண்டும்

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்!

    ReplyDelete