Monday, September 18, 2017

உன்னை நம்பி...


சுப்பு தாத்தா வின் இசையில், ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!   இரட்டை விருந்து இம்முறையும்!


அம்மா உன்னை நம்பித்தானே

உலவுகிறேன் இவ்வுலகில்

உந்தன் பெண்ணாய் இருந்தும் கூட

உழலுவதேன் இவ்விதியில்?

(அம்மா)



ஆதிசக்தி நீ அனந்த ரூபிணி

அன்பின் வடிவாம் அன்னை நீ

மகா சக்தி நீ மந்த்ர ரூபிணி

மங்கலம் அளிக்கும் மங்கை நீ

(அம்மா)



உந்தன் நினைவில் வாழும் போதில்

உள்ளம் இலேசாய் ஆகுதம்மா

உந்தன் சக்தியைப் போற்றும் போதில்

என்னுள் சக்தி ஊறுதம்மா



பற்றிக் கொண்ட பதம் விட மாட்டேன், இனி

எட்டி உதைத்தாலும் போக மாட்டேன்

சுற்றிச் சுற்றியே வந்திடுவேன், உன்னைப்

போற்றிப் போற்றி தினம் பாடிடுவேன்
(அம்மா)


--கவிநயா 

No comments:

Post a Comment