Monday, October 2, 2017

பங்கய வாசினி


சுப்பு தாத்தா வின் இசையில்... மிக்க நன்றி தாத்தா!
கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!


பாற்கடலில் உதித்த

பங்கய வாசினி

பரந்தாமன் திருமார்பில்

வாழும் சுஹாசினி

(பாற்கடலில்)



பதுமம் அவள் வதனம்

பதுமம் அவள் விழிகள்

பதுமம் அவள் வாசம்

பரந்தாமன் அவள் நேசம்

(பாற்கடலில்)



மாதவனின் காலடியில்

மங்கையவள் அமர்ந்திருப்பாள்

திருவடிச் சேவையிலே

திருமுகம் மலர்ந்திருப்பாள்



செல்வத்துக்கெல்லாம் ராணி

திருமால் முகத் தேனீ

தங்க நெல்லி மழை பொழிந்த

தங்க மனத் திருத்தாய் நீ

(பாற்கடலில்)


--கவிநயா 

1 comment:

  1. சுப்புத்தாத்தாவின் அடாணாவில் அமைந்த பாடல் அடடா போட வைக்கிறது!!!

    கீதா

    ReplyDelete