Monday, January 15, 2018

ஒவ்வொரு நாளும்...

சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் மிகவும் உருக்கமாகப் பாடியிருப்பது இங்கே: மிக்க நன்றி தாத்தா!





கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

ஒவ்வொரு நாளும் ஒரு தரமேனும்
உன்னிரு பாதம் பணிந்திடவும்
ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும்
உன்திரு நாமம் பயின்றிடவும்

அருள் புரிவாயே என் அன்னை நீயே
உன்னை விட்டால் எனக்கெவருண்டு தாயே?
கருணை முகிலே அருளைப் பொழிவாய்
கதியென வந்தேன் காப்பாற்ற வருவாய்

நாவினில் உந்தன் நாமம் விதைத்தேன்
உள்ளத்தில் உன்னைப் பயிராய் வளர்த்தேன்
அன்பின் ஊற்றாய் என்னுள் வருவாய்
அருளின் வடிவாய் என்னுள் ஒளிர்வாய்

உன்திருவடியில் வளரும் அன்பும்
உன்திருநாமத்தில் நாவிற்கு ருசியும்
சுவாசந்தோறும் உந்தன் நினைவும்
தந்தருள்வாயே என் அன்புத் தாயே!


--கவிநயா


No comments:

Post a Comment