Monday, January 22, 2018

நெஞ்சமர் நாயகி



உன்னருளாலே நான் உயிர் வாழ்கின்றேன்
உன்னையே எந்தன் உறவாய்க் கொண்டேன்
(உன்னருளாலே)

அன்னை என உனைப் பணிந்தேன்
அஞ்சேல் என மனம் கனிந்தாய்
கொஞ்சம் கொஞ்சம் உனை நினைந்தேன்
கொஞ்சி மனம் குழைந்தாய்
(உன்னருளாலே)

சங்கடம் தீர்த்திடுவாய் சங்கரன் நாயகியே
பொங்கிடும் அருட்கடலே புங்கவனின் துணையே
வெஞ்சமர் வாழ்வினிலே நெஞ்சமர் நாயகியே
செஞ்சுடராய் எழுந்து இருள் கிழி பூவிழியே



--கவிநயா

No comments:

Post a Comment