Tuesday, March 27, 2018

இதமானது!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

இதமானது, மிகச் சுகமானது
அம்மா உன் பத நிழலே நிலையானது
(இதமானது)

ஓடோடி வந்தேனம்மா
உன் மடியில் இளைப்பாற
தாயே நீ அருள்வாயம்மா
என் பிறவி கடைத்தேற
(இதமானது)

பற்றெல்லாம் விட்டு விடத்தான்
உன்னை இறுகப் பற்றி விடத்தான்
அலைபாயும் எந்தன் மனதை
அங்குசத்தால் அடக்கித் தருவாய்

பந்த பாசம் விட்டு விடத்தான்
உலக பந்தம் அற்று விடத்தான்
உன் கையின் பாசத்தாலே
என்னைக் கட்டி இழுத்துக் கொள்வாய்
(இதமானது)


--கவிநயா

No comments:

Post a Comment