Monday, April 2, 2018

பத கமலத்தில் நில்.



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

பத கமலத்தில் நில் மனமே
உலகப் பதரை விட்டுச் செல் மனமே
(பத கமலத்தில்)

அன்னையின் அடி பணிந்தால்
வல்வினைகள் ஓடும்
அவளைத் தினம் நினைந்தால்
ஆனந்தம் உன்னைத் தேடும்
(பத கமலத்தில்)

அது இது எது எனும்
ஆசைகளை விட்டு விடு
பக்தியின் மேல் ஆசை வைத்து
பாதங்களைப் பற்றி விடு

செய்யும் செயல் அத்தனையும்
அவளுக்காய்ச் செய்து விடு
சுவாசிக்கும் காற்றில் அவள்
பெயரை நிறுத்தி விடு
(பத கமலத்தில்)


--கவிநயா

No comments:

Post a Comment