Tuesday, April 10, 2018

கண்ணெடுத்துப் பார்த்தால்...



சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில், இன்னொரு ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!


விந்தையிலும் விந்தை உந்தன் திருவருளே, அதைக்
கண்டு கொண்டால் கையில் வரும் விழுப் பொருளே
(விந்தை)

எந்தை சிவன் இடமிருக்கும் உமையவளே, எனக்கு
எல்லாம் நீயே என்றுணர்ந்தேன் இமையவளே
(விந்தை)

சிந்தையிலே ஆடும் உந்தன் முக கமலம், அதைக்
கண்டு எண்ண வண்டு பாடும் தமிழ் அமுதம்
பண்ணெடுத்து உன்னைப் பாட, களிப்பாகும், நீ
கண்ணெடுத்துப் பார்த்தால் சென்மம் கடைத்தேறும்
(விந்தை)

--கவிநயா

No comments:

Post a Comment