Tuesday, June 12, 2018

காளி!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கருமை நிறக் காளியம்மா
கருத்தில் உன் முகம்
வருத்தமெல்லாம் தீர்க்கும் உந்தன்
கருணைப் பொன் மனம்
(கருமை)

சிவந்திருக்கும் விழிகளிலே
அருளது பொங்கும்
மழையெனவே பொழியும் அன்பில்
உயிரது நனையும்
(கருமை)

அச்சமூட்டும் தோற்றம் நீயும் கொண்ட போதிலும்
அச்சமேதும் தோன்றவில்லை அன்னை உன்னிடம்
பட்சம் கொண்டு பிள்ளையிடம் வந்திடு தாயே, எங்கள்
பக்கம் நின்று அரவணைத்துக் காத்திடு வாயே
(கருமை)


--கவிநயா

No comments:

Post a Comment