Monday, June 4, 2018

தேவரும் முனிவரும்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தேவரும் முனிவரும் போற்றிடுவார்
தேவியுன் பதங்களைப் பணிந்திடுவார்
(தேவரும்)

அன்னையுன் அருமையை அவரறிவார், உன்
அடியவர்க்(கு) அவரும் அருளிடுவார்
(தேவரும்)

ஈரேழு புவனங்கள் படைத்தவளே, எம்மை
ஈன்ற தாயெனவே காப்பவளே
பாரெங்கும் உனது ஆட்சியம்மா, கண்கள்
பார்க்குமிடமெல்லாம் உந்தன் காட்சியம்மா
(தேவரும்)


--கவிநயா

No comments:

Post a Comment