Monday, August 13, 2018

உலகமெல்லாம்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகமெல்லாம் உன்னுருவே
உள்ளமெல்லாம் உன் நினைவே
(உலகமெல்லாம்)

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
வெளியாய் விரிவது உன்னுருவே
நினைவாய் நிஜமாய் ஒளியாய் வழியாய்
உள்ளே ஒளிர்வது உன்னுணர்வே
(உலகமெல்லாம்)

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை
அனைத்தும் ஆக்கிய துன்னருளே
சேயாய் அந்த உயிர்களை யெல்லாம்
தாயாய் அணைப்பது உன்னருளே

உன்னை நினைத்தல் உன்னருளே
உன்னைப் புகழ்தல் உன்னருளே
உன்னைப் பணிதல் உன்னருளே
உந்தன் கருணை உன்னருளே
(உலகமெல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment