Monday, August 20, 2018

என் நிலவு


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என் மன வானில் ஒரு நிலவு
தினம் தினம் தோணுதந்த முழு நிலவு
(என்)

நிலவு உலவுகையில் ஒளி பெருகும், அந்த
நிலவின் ஒளியினில் களி பெருகும்
(என்)

நினைவினில் அவள் முகம் நிலவாகும்
ஒரு நொடி மறந்தாலும் இருள் சூழும்
ஒரு தரம் பெயர் சொன்னால் சுகமாகும், அவள்
மதிமுகம் என் நெஞ்சின் துடிப்பாகும்
(என்)


--கவிநயா

No comments:

Post a Comment