Monday, September 10, 2018

தொழுதேன் உன் பாதம்


தொழுதேன் உன் பாதம் தொழுதேன் அம்மா
அழுதேன் உனைத் தேடி அழுதேன் அம்மா
(தொழுதேன்)

சித்தத்தில் நீ இருந்தால் சுகமாகும், நீ
சித்தம் வைத்தால் அனைத்தும் நலமாகும்
(தொழுதேன்)

வாழ்வினில் பழுதில்லை, நீ தந்தது, எந்தன்
மனதில் பழுதுண்டு நான் கொண்டது
உன்னிடத்தில் அன்பு, நீ தந்தது, உந்தன்
அளவில்லா அருளை நான் என்னென்பது?
(தொழுதேன்)


--கவிநயா


3 comments:

  1. liked ->
    வாழ்வினில் பழுதில்லை, நீ தந்தது, எந்தன்
    மனதில் பழுதுண்டு நான் கொண்டது
    உன்னிடத்தில் அன்பு, நீ தந்தது, உந்தன்
    அளவில்லா அருளை நான் என்னென்பது?
    (தொழுதேன்)

    ReplyDelete