Monday, December 17, 2018

கண் பாராய்; மயல் தீராய்!



அம்மா உன்பெயர் அனுதினம் உரைத்தேன்
அன்பால் உனையே தினந்தினம் அழைத்தேன்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)

உலகினில் உழலும் உன்பிள்ளைகள் கோடி
உன்பிள்ளை நானோ அதிலொரு கோடி
எனை நீ பார்த்திடும் நாளும் வருமோ?
என்குரல் கேட்க உன்செவி சாய்ந்திடுமோ?
(அம்மா)

பலநாள் ஏக்கம் மனதினைத் தாக்கும்
உன் நினைவொன்றே உயிரினைக் காக்கும்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)



--கவிநயா

2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. வருக, ஷைலன்... நன்றி!

    ReplyDelete