Monday, December 31, 2018

ஒரு முறை பாரேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!


உன்னிரு விழியாலே என்திசை பாராயோ?
விண்மதி முகத்தாளே தண்ணொளி தாராயோ?
(உன்னிரு)

கனவிலும் நினைவிலும் கருத்தினில் இருப்பவளே
கடைவிழிப் பார்வையினால் அகிலத்தைக் காப்பவளே
(உன்னிரு)

ஒருமுறை நீ பார்த்தால் சலனங்கள் சரியாகும்
சஞ்சலங்கள் யாவும் சடுதியில் கரைந்தோடும்
தஞ்சமென உனை அடைந்தேன் நெஞ்சில்குடி யிருப்பவளே
அஞ்சலென கஞ்சமலர்ப் பதமெனக்  ளிப்பாயே
(உன்னிரு)


--கவிநயா

No comments:

Post a Comment