Monday, December 24, 2018

வரமொன்று வேண்டும்!


அம்மா உன்னிடம் வரம் கேட்டேன்
அன்பால் அளிப்பாய் அருள் கேட்டேன்
என்னிதழ் மெல்ல
உன்பெயர் சொல்ல
உன்புகழ் பாடும் மனம் கேட்டேன்
(அம்மா)

மதுரையை ஆள மனம் வைத்தாய்
காஞ்சியில் காலடி தனை வைத்தாய்
மயிலையில் மயிலாய்
கயிலையில் ஒயிலாய்
கற்பகமே அருள் வடிவெடுத்தாய்
(அம்மா)

தில்லை நாதனின் சிவகாமி
திருக்கடவூரினில் அபிராமி
காளி கபாலினி
நீலி த்ரிசூலினி
சிம்ம வாஹினி அருள்வாய்நீ
(அம்மா)


--கவிநயா

1 comment: