Monday, June 24, 2019

துணையிருப்பாய்!


துணையிருப்பாய் அம்மா துர்காம்பிகையே
துன்பங்கள் தொலைந்திடவே
துயர் எனை மறந்திடவே
(துணை)

துணிவுடன் செயல்பட துணையிருப்பாய், நெஞ்சில்
நம்பிக்கையைத் தந்து நலமளிப்பாய்
(துணை)

துன்பக் கடலில் என்னை முழுக வைத்தாய், உன்னைத்
தொழுதழுதேன் எனக்குத் துணை புரிவாய்
கதறும் குரல் கேட்டுக் கரம் கொடுப்பாய்
பதறுமென் மனதுக்கு இதமளிப்பாய்
(துணை)



--கவிநயா

1 comment: