Monday, August 12, 2019

உன்னை நாடுகின்றேன்



உன் பாத கமலங்கள் நாடுகின்றேன்
என் சென்னி மீதில் அவை சூடிடுவாய்
(உன்)

பழ வினையாலே வாடுகின்றேன்
பட்சமுடன் பதம் தருவாய், பாடுகின்றேன்
(உன்)

உன் பாதத் தூளியினால்
            பிரமன் உலகை ஆக்க
ஒரு தூளி தானெடுத்து
            விஷ்ணு அதனைக் காக்க
திருவடித் துகளாலே ருத்திரன்
            அழித்தல் செய்ய
ஒரு துளி தருவாயே உலகினில்
            நானும் உய்ய
(உன்)

--கவிநயா



No comments:

Post a Comment