Monday, August 19, 2019

ஒவ்வொரு நிமிடமும்...


ஒவ்வொரு நிமிடமும் உனதடி பணிய
உதவிடுவாய் மரகதமே
ஒவ்வொரு பொருளிலும் உன்முகம் காண
அருள்புரிவாய் அனுதினமே
(ஒவ்வொரு)

ஆதியும் அந்தமும் நீயென்றாலும்
அன்னையும் நீயன்றோ?
பாதியாய் பரமனில் ஆகிநின்றாலும்
பரிபவள் நீயன்றோ?
(ஒவ்வொரு)

துயரங்கள் என்னைத் தொடர்ந்திடும்போதுன்
இணையடி துணையாகும்
அயர்ச்சியில் உள்ளம் தளர்ந்திடும்போதுன்
பெயரெந்தன் துணையாகும்

உன்னை எண்ணாத பொழுதுகள் எல்லாம்
வீண் பொழுதாகும் அம்மா
உன்னை எண்ணி தினம் வாழ்ந்தால் அதுவே
பேரின்பம் ஆகும் அம்மா
(ஒவ்வொரு)


--கவிநயா

No comments:

Post a Comment